திங்கள், 15 ஆகஸ்ட், 2011

காம்போஜம்


காம்போஜம் பெயர்க் காரணம்


காம்போஜம் என்னும் பெயர் எப்படி எழுந்தது என்று தேடினால், காம்போஜம் என்னும் சமஸ்க்ருதப் பெயர் ஒரு செடியின் பெயராகும். அதன் விதையை நாம் தமிழில் குந்துமணி (அல்லது பிள்ளயார்க் கண்) என்கிறோம். (Abrus precatorius)

kunthumani

இந்தக் குந்துமணியானது, எடைக்கல்லாகப் பயன் படுத்தப்பட்டது. குந்து மணி தங்கம் என்கிறோம். அப்படி என்றால் குந்துமணி எடையிலான தங்கம் என்று பொருள். மிகவும் குறைந்த எடை கொண்டவற்றை நிறுத்தி எடை பார்க்க்க் குந்துமணி பயன்பட்டது. ரத்தினம், விலையுயர்ந்த மணிகள் போன்றவற்றைக் குந்து மணியால் எடை பார்ப்பார்கள். ரத்தின வாணிபத்தில் ஈடுபட்ட காம்போஜர்களால் இந்தக் குந்து மணி எடை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். அவர்கள் வாழ்ந்த இடங்களில் இந்தச் செடி அதிக அளவில் இருந்திருக்கலாம். இந்தக் காரணங்களினால் காம்போஜம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

பொதுவாகவே ஓரிடத்தில் அதிக அளவில் காணப்படும் மரம், செடி வகைகளின் பெயரால் அந்த இடம் அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது. நாவல் மரம் அதிகமாக இருந்ததால், நாமிருக்கும் இந்தப் பகுதி நாவலந்தீவு எனப்பட்டது. காஞ்சி, வஞ்சி, கடம்பு போன்ற மரங்களின் பெயர்களால் அந்தந்த இடப் பெயர்கள் உருவாயின. அது போல காம்போஜம் (Abrus precatorius) அதிகம் விளைந்ததால், காம்போஜ நாடு என்ற பெயர் உருவாகியிருக்கலாம். குந்துமணிச் செடி வட இந்தியாவிலும், மேற்குக் கரையிலும் அதிகம் விளைகிறது என்பதும் காம்போஜர்கள் வாழ்ந்த இடங்களுடன் ஒத்துப் போகிறது. மேலும் சிங்களவர்கள் விலையுயர்ந்த மணிகளை ராஜ சூய யாகத்தில் அளித்தனர் என்று மஹாபாரதம் சொல்வதால், காம்போஜத்துத்துடன், சிங்களவர்களுக்கும் தொடர்பு உண்டு என்று தெரிகிறது.


1 கருத்து:

  1. kundhumani enbadhu samaskritham thamizh sol endral KOMBODIA COMBUCHIYA endra kizhakku asia nattirku indha peyar eppadi poi irukkum yosikka ve.ndiathallavaa.

    பதிலளிநீக்கு