சனி, 6 அக்டோபர், 2012

கண்ணகி

சிலப்பதிகாரத்தின் முதன்மைத் தலைவன் கோவலனே. முதன்மைத் தலைவி கண்ணகியே. இக்காப்பியம் இருவரின் குடும்ப வாழ்க்கையையே அலசுகிறது. குடும்ப வாழ்க்கை தொடங்கும்போது கோவலனின் வயது பதினாறை நெருங்கிக் கொண்டிருந்தது எனச் சிலம்பு பதிவு செய்கிறது. பதினாறு வயதிற்கு முந்திய இளமை வாழ்க்கையைச் சிலம்பு காட்டவில்லை. குடும்ப வாழ்க்கை தொடங்கி அவ்வப்போது நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளின் வழியாகவே கோவலனின் இளமை வாழ்க்கையை, ஆய்ந்து பொறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இக்காப்பியம் வரலாறு கூறுவதால்தான் அதன் பிறப்புத் தொடங்கி, வளர்ப்புப் படிநிலைகளைச் சொல்ல வேண்டியதாக உள்ளது. சில உயர்ந்த உண்மைகளை உலகிற்கு உணர்த்தத் திட்டமிட்டுச் செய்த காப்பியம் இது. ஆதலால் நாடகப் பாங்கில் தொடங்கி, அறிவூட்டுவதற்கு வேண்டிய நிகழ்ச்சிகளை நிரல் படுத்தாமல் ஆர்வத்தைத் தூண்டுமாறு ஆங்காங்கே வளர்த்து இளங்கோவடிகள் பின்னியுள்ளார்.
எனவே நிகழ்ச்சிகளின் வழி அறியும் செய்திகளிலிருந்து கோவலன் & கண்ணகி இளமை வாழ்க்கையைப் பற்றி ஊகப்படுத்தியே அறிய வேண்டியுள்ளது.
கி.பி. 2&ஆம் நூற்றாண்டு சிலப்பதிகாரம் தோன்றிய காலம் என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்பட்ட காலத்தையே எடுத்துக் கொள்ளலாம். இந்தக் காலத்தில் தமிழகம் எவ்வாறு இருந்தது? தமிழ் மக்கள் ஒழுகலாறுகள் எவ்வாறு இருந்தன? சிலப்பதிகாரத்தில் உள்ள பல பழக்க வழக்கங்கள் இன்றளவும் தமிழ் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. என்றாலும் இளங்கோவடிகள் தெரிவிக்க விழைந்த சில அடிப்படை உண்மைகள் மறக்கப்பட்டோ அல்லது உணரப் பெறாமலோ உள்ளனவோ என்ற எண்ணம் என்னுள் எழுவது உண்டு. அவற்றைப் பற்றியும் சிந்திக்க எண்ணுகின்றேன்.
போகநீள் பூகழ் மன்னும் புகார் நகரில் வான்நிகர் வண்கை மாநாய்கன் குலக்கொம்பாகக் கண்ணகி தோன்றினாள். பன்னிராண்டு வயதுடையவள். திருமகளைப் போன்ற வடிவுடையவள். இவள் நிறம் அருந்ததியை ஒத்தது. இவள் பெயர் பெருங் குணங்களாலேயே நிலைபெற்று விளங்கிற்று. இவளுடைய இளமை வாழ்க்கை பற்றி அடிகள் பதிவு செய்யவில்லை. எவ்வாறு பெற்றோர்களால் வளர்க்கப் பெற்றாள் என்றும் தெரியாது. கல்வி உண்டா? தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உறுதி. குடிமைப் பண்பும், குலக்குணமும் நிறைந்து விளங்குமாறு இவள் வளர்க்கப்பட்டுள்ளாள் என்பது மட்டும் உறுதி.
கோவலன் கண்ணகி திருமணம் பெற்றோர் முடிவு செய்து சடங்குகளுடன் நடந்துள்ளமை குறிக்கத் தக்கது. ஒருவரை ஒருவர் பார்த்து ஒருமைப்பட்டுப் பெற்றோரிடம் தெரிவிக்க நடந்த திருமணம் என்றுகூறக் குறிப்பேதும் இல்லை. மாநகரில் சடங்குகளை நடத்தி மணம் ஈந்தார் பெற்றோர் என்பது மட்டுமே பதிவாகியிருக்கிறது. பெற்றோர் கற்பு நெறிப் படுத்தியுள்ளனர் என்பதும் தெளிவு. இதனைத் தொல்காப்பியர் கற்பியலில், கற்பெனப்படுவது கரணமொடு என்று சுட்டுவார்.
சிலப்பதிகாரக் காலத்தில் கடவுள் நம்பிக்கை என்ற கருத்துண்மையை முதலாவதாக எடுத்துக் கொள்ளலாம். அடிகளே கடவுள் நம்பிக்கை உடையவராகவே தெரிகின்றார். சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவி என்று கண்ணகியை அடிகள் யாண்டும் எடுத்துக் கூறவில்லை. அறிமுகப்படுத்தும் முதற்பாத்திரமாகத்தான் கண்ணகியை அவர் புலப்படுத்துகின்றார். இயல்பாகவே கடவுள் வாழ்த்து என்ற தொடக்கத்தை அடிகள் பின்பற்றவில்லை. சிலப்பதிகாரக் காப்பியத்திற்கு முன்பு பல காப்பியங்களும் நூற்களும் தமிழில் இருந்திருத்தல் வேண்டும். அவற்றில் கடவுள் வாழ்த்து இருந்தமை அறிய முடியவில்லை. சங்க இலக்கியத்திற்குப் பின்னர் வந்த பனம்பாரனார் கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்த்ததாகக் கூறுவர். ஆனாலும், இளங்கோவடிகளுக்குக் கண்ணகியைத் தெய்வமாகவே அறிமுகப்படுத்தும் பாங்கு இங்கு நினைக்கத் தக்கது.
அவளுந்தான், போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும் பெயர்மன்னும் கண்ணகி என்று கண்ணகியை பெண்கள் வழிபடும் ஓர் ஒப்பற்ற தெய்வமாகவே கூறுவது இங்கு நன்குச் சிந்திக்கத் தக்கது. பெண்கள் அழகைப் பாராட்டலாம். அவள் அறிவைப் பாராட்டலாம். ஆனால், அடிகளோ பெண்கள் அவளைப் பார்த்தவுடன் கையால் தொழுது வணங்கினர் என்பது தமிழகத்தில் சிறுதெய்வ வழிபாட்டிற்குத் தொடக்கமாகக் கருத இடம் தருகின்றது. இளங்கோவடிகள் கண்ணகியைக் கோவலன் மனைவியாகக் கூறினாலும் கோவலனும் அவளைத் தன் மனைவி என்று கருதி முதலிரவில் அவளோடு இன்பம் துய்க்க முயன்றான் என்பதும் சிலப்பதிகாரத்தில் மனையறம்படுத்த காதையில் சொல்லப்படுகிறது. ஆனாலும் கண்ணகிபால் கோவலன் தான் விரும்பிய கூட்டத்தைப் பெற முடியவில்லை என்பதும் அடிகளால் இலைமறைக் காயாக உணர்த்தப்படுகிறது. இங்கு, அடிகளின் சொற்களை நாம் கூர்ந்து பார்த்தல் இன்றியமையாதது. கண்ணகியின் பெற்றோரும் கோவலனின் பெற்றோரும் தாங்களாகவே விரும்பித் தங்கள் குடும்பங்களுக்குள் ஓர் ஒத்த உறவை ஏற்படுத்திக் கொள்ளவே இவர்கள் திருமணம் ஊர்மெச்ச நடந்தது என்பதை, இருபெருங் குரவரும் ஒரு பெரு நாளால் மணவணி காண மகிழ்ந்தனர் என்றும், மாநகர்க்கீந்தார் மணம் என்றும் அடிகள் கூறுவதும், இத்திருமணம் மனம் ஒத்த மணமக்களுக்காக நடந்ததாகக் கூறாமையும் கருதத்தக்கது. கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணத்திற்கு முன்பு தொடர்பு இருந்ததாகக் கூறப் பெறவில்லை. திருமணம் முடிந்த முதல்நாள் இரவுதான் இருவரும் தனியாகச் சந்திக்கின்றார்கள். மனமொத்த மணமக்களாய் இருந்தால் இருவரிடையேயும் ஏதாவது கருத்துப் பரிமாற்றம் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இங்குக் கோவலன் மட்டுமே பேசுகின்றான். கண்ணகி மறுமொழி ஏதும் கூறவில்லை. இதனை நம் ஆராய்ச்சியாளர்கள் அது பெண்மையின் அடக்கம் என்று பெருமையாகக் குறிப்பிடுகின்றனர். இக்கூற்றும் மனையறம்படுத்த காதையும் மீள்பார்வைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
கோவலன் கண்ணகியிடம் கூறுவன அனைத்தும் குறியாக் கட்டுரை என்றும் உலவாக் கட்டுரை என்றும் அடிகள் கூறுகின்றார். மாசறு பொன்னே, வலம்புரி முத்தே என்று தொடங்கிக் கோவலன் பேசியவை அனைத்தையும் இங்கு நோக்குதல் வேண்டும். நடைபெற வேண்டியது புது மணமக்களின் மண வாழ்க்கைத் தொடக்கம். கவிஞர் கண்ணகியையும் கோவலனையும் அந்த இன்பமான நேரத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை கதிர் ஒருங்கிருந்த காட்சி போல என்று சூரியனும் நிலவும் ஒன்றாக இருப்பது போல இருந்தனர் என்று கூறுகின்றார். அதாவது எது உலகில் நடவாதோ, அதாவது சூரியனும் நிலவும் ஒரு காலத்தும் இணைந்து ஒரே இடத்தில் இருக்காது. அதனைக் கண்ணகி & கோவலன் இணைந்திருப்பதற்கு உவமையாகக் கூறுவதிலிருந்து நடக்க இயலாத ஒன்றினை உவமையாகக் கூறுவதால், மணமக்கள் இருவரும் இணைந்திருக்கப் போவதில்லை என்பதைக் குறிப்பால் விளக்குகிறார் எனலாம்.
அடுத்து நடைபெற வேண்டிய கூடும் இன்பம் எனும் கூட்டம் பற்றிய செய்தி சொல்லப்படுகிறது.
கோவலன் அணிந்திருந்த மாலையும், கண்ணகி அணிந்திருந்த மாலையும் நன்றாகக் கசங்கிப் போயின என்று தெளிவாகக் கூறுகிறார். கோவலனும் கண்ணகியும் கூடும் இன்பத்திற்குப் பெரிதும் முயன்றிருக்கின்றார்கள் என்று தெரிகிறது. இருவரும் கட்டிப் புரண்டதால் இருவரும் அணிந்திருந்த மாலைகளும் நன்றாகக் கசங்கிப் போயின என்று தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால், மணமக்கள் இருவரும் புணர்ச்சி நிறைவுற்று மனம் மகிழ்ந்தனரா? என்றால், இங்குதான் கூட்டம் நிகழவில்லை என்பதை அடிகள் கையற்று என்ற ஒரு சொல்லால் விளக்குகின்றார். கையறு நிலை என்றால், ஒன்றை இழத்தலால் தோன்றும் இயல்பு ஆகும். இங்கு என்ன இழக்கப் பெற்றது என்றால், கோவலன் கண்ணகி கூட்டம் (இன்பம்) இழக்கப் பெற்றது என்பதே ஆகும். அந்திமாலைச் சிறப்புச் செய் காதையிலும் கண்ணகியைக் குறிப்பிடும்போது கையறு நெஞ்சத்துக் கண்ணகி என்றே இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.
கோவலன் தன் காதல் வேட்கை தீராமையால்தான், அதைத் தணிக்கும் பொருட்டுக் கண்ணகியைப் பார்த்துப் பேசித் தன் நிறைவேறாத காதலைப் போக்கிக் கொள்ளுகின்றான். இதனால்தான் கோவலன் கண்ணகியை நோக்கிப் பேசியவை அனைத்தும் உலவாக் கட்டுரை என்றும், அவன் பேசி முடிக்கும்போதும் குறியாக் கட்டுரை என்றும் அடிகள் தெளிவுபடக் கூறுகின்றார். இதனைத் தொல்காப்பியமும் …கைக்கிளைக் குறிப்பே என்று புலப்படுத்தும்.
மனையறம் படுத்த காதையுள் இருவருக்கும் கூட்டம் நடந்திருந்தால் மணமக்கள் இருவரும் அயர்ந்து உறங்கியிருப்பார்களே தவிர நீண்ட உரையாடல் நிகழ வாய்ப்பில்லை என்பதும் அறிவியலார் துணிபும் ஆகும். மேலும் கோவலன் கண்ணகி இருவரின் இல்லற வாழ்க்கை பற்றி நாம் நூலுள் விரிவாக அறியுமாறு இல்லை. குறிப்பாகச் சில செய்திகள் நாம் உய்த்துணரத்தக்க வகையில் உள்ளன. இருவரது திருமண வாழ்க்கையில் சில ஆண்டுகள் கழிந்தன என்பதால், அந்த மண வாழ்க்கை மகிழ்ச்சிக்கு உரியதாகத் தோன்றவில்லை. கண்ணகி என்னவோ படைப்பால் மானிடப் பெண். அதற்குரிய இயல்பான நடைமுறைகளை உடையவளாகவே வருணிப்பார். மணமக்கள் இருவரையும் தனி வீட்டில் வேறு வைக்கிறார்கள். பதினெட்டு வயதுக் கோவலன் புணர்ச்சி வேட்கையின் பொருட்டு நடன மங்கை மாதவியைச் சேருகின்றான். கண்ணகி தனியளாய்த் தன் வீட்டில் வாழும்போது கோவலனின் பெற்றோர் அவளைப் பார்க்க வரும்போது வாயால் முறுவல் செய்தனள் என்று கூறுவார். உண்மையில் அவளுக்கு இன்பமான வாழ்க்கை இல்லை என்பதையே இக்குறிப்பும் உணர்த்துகின்றது. கோவலனோடு மெய்யுறு இன்பம் கண்ணகி பெற்றிருந்தால், நூலுள் எங்காவது அவள் சுட்டியிருப்பாள். கண்ணகிக்குத் தேவந்தி என்றொரு தோழி இருந்தாள். தன் தோழி தேவந்தியிடம் நள்ளிரவில் தான் கண்ட கனவு பற்றிக் குறிப்பிடும்போது, கோவலனைத் தன் கைப் பற்றியவன் என்று மட்டும் குறிப்பிடுவதோடு என் மனம் பற்றியவன் என்று குறிப்பிடாமையும் அவளுடைய தொடர்பு, அவனைத் தன் பெற்றோர் மணம் செய்து வைத்த உறவு மட்டுமே என்பது, மானுட வாழ்க்கை வாழ்வதால் இக்கால மரபிற்கேற்ப ஒரு குடும்பப் பெண் எப்படியெல்லாம் நடக்க வேண்டுமோ அப்படியெல்லாம் நூல் முழுவதும் வாழ்ந்து காட்டுகிறாள். ஊருக்காகச் செய்யப்பட்ட திருமணம் என்பதைத் தவிர, மணமக்கள் கோவலனும், கண்ணகியும் ஒரு நாளாவது இன்பம் துய்த்தனர் என்றோ, கண்ணகியோ அல்லது கோவலனோ யாண்டும் இருவரும் மீண்டும் கூடி வாழ்ந்து இல்லற இன்பம் துய்க்க விரும்பியதாக, எண்ணியதாகக் கூடக் குறிப்பேதும் இல்லாமை நோக்கத்தக்கது.
தான் ஒரு பத்தினித் தெய்வம் என்றோ, தன்னிடம் அளவற்ற ஆற்றல் உண்டு என்றோ அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தான் மதுரைக்குச் சென்று பொருளீட்டி, இழந்த பொருளை மீட்க எண்ணும் கோவலன் கண்ணகியோடு மதுரையில் குடும்பம் நடத்தி மகிழ விரும்பியதாகவும் கூறாமை நோக்கத் தக்கது.
இவ்வாறு தாமரை இலைத் தண்ணீராக வாழ்க்கை நடத்த வேண்டிய நலைக்குக் காரணம் என்ன? முன்பு குறிப்பிட்டவாறு கண்ணகியைப் பெண்கள் தொழுது ஏத்தினர் என்பதும், வேட்டுவ வரியில் தெய்வம் ஏறிய வேட்டுவ மங்கை கண்ணகியைப் பார்த்து, இவளோ கொங்கச் செல்வி, குடமலையாட்டி, தென்தமிழ்ப்பாவை செய்த தவக்கொழுந்து, ஒரு மாமணியாய் உலகிற்கோங்கிய திருமாமணி என்று தெய்வம் வந்துரைக்க என்று அடிகள் குறிப்பிடுவார். உலகில் மற்றவர்களுக்கெல்லாம் கண்ணகி தெய்வமாகவே தெரிவதாக அடிகள் சுட்டுவர். அழற்படு காதையில் மதுராபதித் தெய்வம் கண்ணகியைத் தெய்வம் என்று உணர்ந்து அவள் முன்வர அஞ்சிப் பின்புறமாக நின்று பேசியதாகக் குறிப்பிடுவார். மதுரை மாநகரத்து மக்கள், கையில் தனிச் சிலம்போடு அரற்றி வரும் கண்ணகியைத் தெய்வம் என்று உரைக்கின்றார்கள். வழக்குரை காதையில் வாயிற் காவலன் கண்ணகியைக் காளி என்றுகூட அரசனிடம் கூறுகின்றான். இவ்வாறு பல திறப்பட்ட மக்களும் கண்ணகியை மானுடப் பெண்ணாகவே பார்க்கவில்லை. இளங்கோவடிகளின் விருப்பம் கண்ணகி மாசு மருவற்ற பெண்ணாகவே, ஒரு சாதாரண மனிதனுக்கு மணம் செய்து வைத்தாலும் மரபுகளுக்கேற்ப வாழ்ந்து, தெய்வ நிலையை எய்த வேண்டும் என்ற தம் குறிக்கோளைக் காப்பியத்துள் மிகவும் நயமாகக் கையாண்டுள்ளமை வியக்கத்தக்கதாகும்.
சுருங்கச் சொன்னால் சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் பங்கு முதன்மையானது. அவள் தீது இலாதவள். முதிரா முலையள். அளியள். தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி. தன்னைக்காத்துக் கொண்டவள். தற்கொண்டவனைப் பேணியவள். தகைசான்ற சொல் காத்தவள். சோர்விலாதவள். பொறாமையற்றவள். கற்புடைய மனைக் கிழத்தி. சிறுமை கண்டு பொங்குபவள். கணவனுக்குக் கட்டுப்பட்டவள். பிறர் புகழின் நாணுபவள். நல் நோக்குடையவள். பேச்சுவன்மை உடையவள். நீதிக்குப் போராடுபவள். வாதிடும் வழக்கறிஞர். பிறர்மனை நயவாத பேராண்மை உடையவள். கோவலன் போற்றா ஒழுக்கத்திற்கு, மாதவியைக் காரணமாக்காதவள். ஊழ்வினையை நம்புபவள். அஞ்சாத நற்பண்புடையவள். மக்களும், மன்னரும், அமரரும், கடவுளும் போற்றி வணங்கும் சிறப்புத் தன்மை உடையவள். சேரன் செங்குட்டுவனால் வடபுலத்தில் கல் எடுத்துக் கங்கையில் நீராட்டிக் கோயில் எழுப்பிய பெருமைக்குடைய மா பத்தினி கண்ணகி நல்லாள். மனிதப் பிறப்பு எடுத்து ஓர் ஆண் மகனுக்கு வாழ்க்கைப் பட்டாலும் தெய்வச் சிறப்பிற்குரிய மாசு மருவற்ற கன்னிமைத் தன்மை கழியாதவளாகவே இளங்கோவடிகள் சிறப்பாகப் படைத்துள்ளார் என்ற முடிவு சான்றோர் தம் ஆய்விற்குரியது என்பது என் கருத்தாகும்.
------------
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் ஓய்வுபெற்ற தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் இரா. இராமநாதன் அவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்குத் தமிழ்மொழியைக் கம்ப்யூட்டர் மூலமாகக் கற்றுக் கொடுத்து வரும் ஆசிரியர்களில் ஒருவர். மிடுக்கான அவருடைய தோற்றத்தை இந்த வயதில் பார்த்தால், இளமைக் காலத்தில் எப்படி எடுப்பாக இவர் இருந்திருப்பார் என்பதை ஊகிக்க முடியும். இந்தப் பொலிவுக்கும், வலிவுக்குமான ஒரே காரணம் இவர் மருந்து போல சாப்பிடுவது உணவைத்தான். 50 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடிக்கு நேருஜி வந்திருந்த போது நேரில் சந்தித்த இவரிடம், நேருஜி என்ன கேட்டார் தெரியுமா? எல்லா மொழிகளிலும் எழுத்து, சொல் மட்டும்தானே இருக்கின்றன. அது என்ன உங்கள் தமிழ் மொழியில் பொருள் என்று தனிப் பிரிவு. அது என்ன? என்றாராம்.
நேருஜி கேட்ட கேள்வி தொல்காப்பியத்தில் உள்ள பொருள். வியந்துபோன பேராசிரியர் இராமநாதன், சரியான விளக்கம் தந்து நேருஜியை வியப்பில் ஆழ்த்தினார்.
பாவேந்தர் பாரதிதாசனோடு இவர் பழகியவர் மட்டுமல்ல, உடனுறைந்தவர். தி.வ. மெய்கண்டாரின் கவிதா மண்டலத்தில் பாவேந்தரோடு வாழ்ந்தது பற்றிய இவருடைய அனுபவங்கள் தொடர் கட்டுரைகளாக வெளிவந்துள்ளன.
காரைக்குடி என்றாலே கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்களின் கம்பன் கழகம்தான் தமிழ்கூறு நல்லுலகத்திற்குத் தெரியும். அதே காரைக்குடியில், மறைந்த தன் அன்பு மனைவியின் திருப்பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, பத்தினி கண்ணகியைப் பார்போற்றும் தெய்வமாகப் பரப்பும் சிலப்பதிகாரத் தொண்டு செய்யத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளவர் பேரா. இராமநாதன் அவர்கள்.
கம்பன் அடிப்பொடி போல இவர் இளங்கோ அடிப்பொடி. காரைக்கால் அம்மையாரைப் போல, கண்ணகியும் தெய்வம் என்பது இளங்கோவடிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! இதைத் தெரிந்து கொண்ட இரண்டாவது புலவர் பேராசிரியர்தான்.
கைகுவித்துத் தொழும் தெய்வமாகக் கண்ணகியைக் கண்டுகொண்ட பிறகு, அந்தத் தெய்வ மாக்கதையைத் தேசம் முழுவதிலும் ஏன் தேசம் கடந்தும் பரப்புரைக்கும் பணியினைத் தொடங்கித் தொய்வில்லாமல் செய்து வருகிறவர்.
கண்ணகித் தெய்வம் கன்னித் தமிழின் உன்னதமான அடையாளம். கடலுக்குள் கால்கோள் போட்டுக் கட்டப்பட்ட பாம்பன் பாலம் போல, பேராசிரியரின் இக்கட்டுரை இலக்கியக் கடலுக்குள் கால்கோள் போட்டுக் கட்டப்பட்ட பைந்தமிழ்ப் பாலம்.
(பொ&ஆர்.)
நன்றி - ஓம் சக்தி டிசம்பர் 2011

செவ்வாய், 2 அக்டோபர், 2012

அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்! .



அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்!
. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwpti3dGBN8kPV1crioRkKOIaZ1I7qySNb6VNfPaMXMw8ym5qTeg9zF5dMRNkQ6r9eWtjI7sMkRtzy8C0ujt5UqhPwV7sHZpMCpmTlK9xImwByHddFCbesHuuLpOEH48WDgXZlyJvajOYe/s320/tamil+game.JPG
அமெரிக்காவின் மாயன் நாகரீகத்தில் இருந்த தமிழர் விளையாட்டு (தாயம்)

  
தாயம் பண்டைத்தமிழர்களின் ஒரு விளையாட்டு. தோன்றியதும் நம்மிடமிருந்துதான். அப்படியென்றால் இந்த விளையாட்டு மாயன் மக்களுக்கு எப்படித் தெரியும்?

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

  உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகள்  உலக அழிவைப் பற்றிப் பேசுகின்றன. 

  Olmec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்கக் கண்டத்தை சேர்ந்த மக்கள்இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்கக் கண்டத்தைக் கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரைப் பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

  இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியேறினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள். செவ்விந்தியர்களுக்கும்தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதைப் படிப்பவர்களுக்குஇது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம்வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம்உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

கடலில் மூழ்கிய தமிழர்களின் வாணிகக் கப்பல்:

  நல்லவேளை இந்த உண்மையைக் கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_QOe9Fu0rble7FDa1VogQwHJD_Xelp3eM_aCql6qAe-Jz9JDZ-q45WrIJFe0ZDEUBgvFZd2mhyphenhyphenf-DBZK_DKhR9mnHu6mZX2CwJFpah46loQ5rH8I_hZa_cCCh5W09YpcMfOKNK_QD5TUy/s400/tamil+language.jpg


  The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களைமெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்துக் கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

  ‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள் என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில்யாரும் திரும்பிப் பார்க்கக் கூட யோசிக்கும் புத்தக அடுக்கில்தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அருமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படித்தான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

  செவ்விந்தியர்களின் கலாச்சாரக் கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சாரக் கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல்செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாக இத்தகைய நுட்பங்களைப் பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஓரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியாஎகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

  செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்கக் கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கைநிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலாச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும்கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும்வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில்செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டைக் காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy8tvPsP8HvpmcUr2VOquXTHDrF0KFGYf_zUW5EZSFlYdnQ3dM0LfouH5GiCFUwborgq0Sctbm8-xMfd9UMBMvLYsaUlt9AxBi092y709pCa34l3snJoYYnihqLMHd42CAo7Gexw8WHAYJ/s320/calendar+maya.jpg
மாயன் காலண்டர்

  ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி.12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனைக் கதை போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archaeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்தக் கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள்தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

  ஆராய்ச்சியாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்குக் கப்பல்களோடு பொருந்திப்போகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கரையோரமாகவே பயணித்துச் செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுக்கடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

  கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளைக் கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுக்கடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கக்கூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிப்படையில் அமைந்த பெயர்களைப் பற்றிக் கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிகக் கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும்அமெரிக்கக் கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றைப் பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுக்கடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன்தன்னுடைய சிறப்புகள் பற்றிப் பதியத் தவறியது கேடுகாலமே. (ஆஸ்திரேலியாவில் தமிழர்களை ஒத்த பழங்குடியினரின் புகைப்படம் கீழே)

  நல்லவேளை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தைத் தடை செய்திருக்கின்றன. 

  உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 
நன்றி: மகேந்திரன் ஆறுமுகம்தமிழால் இணைவோம்

ஆஸ்திரேலியா பழங்குடியினர் :

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKjN5ZTmQPRztNb2WZ6VX_sIFXgNlxhPvs0TrhG44XtfYAYSoCZVqqseetlR4Car9UA3nyD-JWcp_yxsbt-Y6vb4gLdm3YqH8D-_PEzvFEe2kDHICnvVaGdeFhtnh3RcwzgSjS68M56Bnk/s320/tamilians.jpg


  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பழங்குடி மக்களின் புகைப்படம். இதை உங்கள் வீட்டில் காட்டினால் யாருடைய தாத்தா என்றுதான் கேள்வி வரும். இவர்களின் மொழிகூட தமிழை ஒத்துள்ளது. 
நன்றி:  தேடல்

இவற்றையெல்லாம் நம்பாதவர்களுக்கு மேலும் சில ஆதாரங்கள்:

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7wo00RYShHZ2CLRMXelN70FEDvtVrzx0qJDlNxQx49Id3f-9qm3N70y1bhKO1gmMcNlK23a-V-In7jVTo8G2j1xtd4X-6PvOOXEPD9Zs_8ZN_QiT4eO9XG_63QLa_IbGoOcR-kfmg6-AM/s1600/new_zealand_tamil_bell.jpg
நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்துடைய மணி  - காலம்  AD 1200