தமிழ் எழுத்து தோன்றிய காலம்.(Thanks-net)
மூவாயிரம்
ஆண்டுகட்கு முன் தோன்றிய மொழி தமிழ். இன்றைய மொழிக் குடும்பங்களில் தலைசிறந்த எட்டுள் திராவிட
மொழிக் குடும்பமும் ஒன்று. திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி
தமிழ். உலக மொழிகள் அனைத்-துமே தமிழ் மொழியிலி-ருந்துதான் தோன்றின என்பது
மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரின் கருத்து.
இந்நிலையில்
தமிழ் மொழி எழுத்து கி.பி. 6_7ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியது என்றும் அது செம்மையுற்றது சோழர்காலத்தில்
என்றும் அண்மையில் மய்ய சாகித்ய அகாதெமியின் ‘பாஷா சம்மான்’ விருது பெற்ற பேரா. எஸ். செத்தார் என்ற கன்னட
அறிஞர் கூறியது இந்து ஆங்கில நாளேட்டில் (8.05.2009)
வெளி
வந்துள்ளது. ஒரு மொழி அறிஞர் பிறமொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் அறியாத
பேராசிரியராக உள்ளது வியப்பாக உள்ளது. அதுவும் ‘சங்கம்
தமிழகம்’ என்ற சங்கத்தமிழ் பற்றிக் கன்னட மொழி-யில்
எழுதிய நூலுக்காக விருது பெற்றபின் இவ்வாறு கூறியிருப்பது விந்தையாக
உள்ளது.
ஏன்
இப்படிச் சொன்னீர்கள் என்று அவரைக்கேட்டால் நம் ஊர்
வையா-புரிப் பிள்ளையைத்தான் காட்டுவார். ‘தொல்காப்பியர் கி.பி.
5ஆம்
நூற்றாண்-டில் வாழ்ந்தவர் என்று அழுத்தம் திருத்தமாகக் (தமிழ்ச்சுடர் மணிகள்,
பக். 38)
கூறியுள்ளார்.
‘மெல்லத் தமிழினிச் சாகும் என்றுரைத்தான் ஒரு பேதை;
(பாரதியார்)
இந்தப் பேதையோ தொல்காப்பியர் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார்
என்று கூறியுள்ளார்.
மேல்
நாட்டுத் தமிழறிஞரான டாக்டர். கமில் சுவலபில் கூட வையா-புரியாரின் வாதத்தை
எடுத்து வைத்துக் கொண்டுதான் ‘தமிழ் எழுத்தின் தோற்றத்தைப் பற்றிய ஆய்வைத்
தொடங்குகிறார். இருப்பினும் பல்வேறு அறிஞர்களின் கருத்துகளையும்
கல்வெட்டுச் சான்றுகளையும் தீவிரமாக ஆராய்ந்து கி.மு. 100_க்கும்
கி.பி. 250_க்கும் இடையில் தோன்றியது சங்க இலக்கியம்
என்ற முடிவுக்கு வருகிறார். “Taking into consideration the cumulative
evidence of the linguistic, epigraphic, archeological numismalies and
historical data, both internal and external, it is undoubtedly possible to
arrive at the following final conclusion: the earliest corpus of Tamil
Literature may be dated between 100 B.C. and 250 A.D. (on Tamil Literature of
South India by Kamil Zvelebil, 1973.)” “Taking into consideration the
cumulative evidence of the linguistic, epigraphic, archeological numismalies
and historical data, both internal and external, it is undoubtedly possible to
arrive at the following final conclusion: the earliest corpus of Tamil
Literature may be dated between 100 B.C. and 250 A.D. (on Tamil Literature of
South India by Kamil Zvelebil, 1973.)”
தமிழ்எழுத்து
வரிவடிவத்தைப் பல்வேறு சான்றுகளைக் கொண்டு ஆய்வு செய்கிறார்.
பழந்தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் (கி.மு. 3_ 1ஆம் நூ) தொல்- காப்பியம் (கி.மு. 2_1
ஆம் நூ)
சங்க இலக்-கியம் (கி.மு. _ 1 ஆம் நூ) அரிக்கமேடு (கி.பி. 1_
2 ஆம் நூ)
பிற்காலத் தமிழ் பிராமி கல்-வெட்டுகள் (கி.பி. 3
_ 4 ஆம் நூ)
இவ்வளவு காலகட்டங்களை ஆய்வு செய்யும் சுவலெபில் மொத்தத்தில் சங்க இலக்கிய
நூல்களின் காலம் (கி.மு. 1_கி.பி. 4 ஆம் நூ) என்ற முடிவுக்கு வருகிறார்.
சிந்துவெளி
நாகரிகம் பற்றி ஆய்வு செய்துள்ள முனைவர் மா. வாவூசி
(இயக்-குநர், மனிதநேயம் அய்.ஏ.எஸ்
பயிற்சி மய்யம்) எழுதியுள்ள சிந்துவெளியிலும் அதற்கப்பாலும் பழந்தமிழ்ப்
பண்பாட்டு ஏகாதிபத்தியம் (2008) நூலில் சிந்து-வெளி முத்திரைகளைப்பற்றிய
தமிழ் எழுத்துகளின் தோற்றம் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
“காட்டுமிராண்டிகளான ஆரியர் வருகைக்கு முன்னரே,
இந்தியாவில்
ஒரு தலை சிறந்த நகர நாகரிகத்தை உருவாக்-கியவர்கள் தமிழர்கள் என்பதும்,
அந்நாக-ரிகம்
நிலவிய காலத்தே வழங்கப்பட்ட மொழி, எழுத்து பழந்தமிழ்க்
குடும்-பத்தைச் சார்ந்தது என்பதும் அய்யத்-திற்கப்பாற்பட்ட உண்மைகளாகும்.
குறிப்பாக இன்றும் தனித்தன்மையோடு இயங்கும் தமிழ் மொழியின் முந்தைய
வடிவமே சிந்து நாகரிக எழுத்து வடிவமாகும்.
பேரா.
செத்தார் அசோகர் கண்டு-பிடித்த பிராமி எழுத்துகளுக்கு
முன் தென்னிந்தியாவில் எந்த மொழிக்கும் எழுத்து கிடையாது என்கிறார்.
அசோகரின் பிராமியை முதலில் கன்னடமும் தெலுங்கும் ஏற்றுக் கொண்-டன.
கி.பி. 6ஆம் நூற்றாண்டில்தான் தமிழ் மொழி பிராமி
வரிவடிவத்தை ஏற்றுக்கொண்டது என்கிறார் செத்தார். (The
Tamil Script emerged during the pallava period) 6-7 Century and attained
maturity under the cholas
பிராமி
வடிவத்தைப்பற்றி முனைவர் வாவூசி குறிப்பிடுவது வருமாறு:
ஆரம்ப நிலையில்
பிராமி எழுத்து வடிவானது பழந்தமிழ் மொழிகளில் மிகப் பழைமையான தமிழ்
மொழிக்காக உருவாக்கப்பட்டது. இவ்வரிவடிவின் ஆரம்ப நிலையே ஹரப்பா நாகரிக
மக்கள் தங்களுக்குள் எழுதி வந்த எழுத்து வடிவமாகும். இத்தகு பிராமி வடிவத்தைப்
பிற்காலத்தில் ஆரியமல்லா மொழியான பிராகிருதம் பயன்படுத்திக் கொண்டதால்,
தமிழ் மொழி
தனக்-கென, வரிவடிவத்தை உருவாக்கிக் கொண்டது. பிராமி வரிவடிவமானது
சிந்து நாகரிக எழுத்து வடிவத்திலிருந்து வளர்ந்ததைப் பேரா. வேங்கடன்
தெளிவு-படுத்துகிறார். எனவே பழந்தமிழ் மொழிக்-காக உருவாக்கப்பட்ட பிராமியின்
ஆரம்பகால வடிவங்கள்தான், ஹரப்பா நாகரிக முத்திரைகளில் காணப்படு-கின்றன
என்பது மிகச் சரியானதாகும்.
அஸ்கோ
பர்போலா போலந்து, சோவியத் ஆய்வாளர்கள்,
திரு
அய்ரா-வதம் மகாதேவன், ஹீராஸ் பாதிரியார்,
போன்றோர் “ஹரப்பா
நாகரிக எழுத்து வடிவங்கள் பழந்தமிழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது
உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என்கிறார் முனைவர் வாவூசி.
உண்மை இவ்வாறிருக்க
பேரா. செத்தார் தமிழ் மொழி பிராமி வடி-வத்தைக் கி.பி. 6
ஆம் நூற்றாண்டில்-தான்
முதல் முதல் பெற்றது என்று கூறி-யிருப்பது அவர் தம் மொழியறிவின்-மையைப்
புலப்படுத்துகின்றது. இது- வேத-னைக்குரியதாகும்.
செத்தாரைப் போன்ற வேறு
சில அறிஞர்கள் சிந்துவெளியில் காணப்-படும் முத்திரைகள் எழுத்து வடிவம்
இல்லையென்ற கொள்கையைப் பரப்பி வருகின்றனர். ஃபார்மர்
(கலிஃபோர்-னியா)
விட்ஸெல் (யார்வேட் பல்கலைக்-கழகம்) என்பார் இக்கருத்தை வெளியிட,
இதை மறுத்து
அஸ்கோ பர்போலா (போலந்து) மெஸ்ஸிகோ விடேல் போன்ற அறிஞர்கள்
எழுதியுள்ளனர்.
இவர்கள்
அனைவருடைய கருத்து-களையும் சீர்தூக்கிப் பார்த்து ‘சிந்து-வெளி
வரிவடிவங்கள் படிக்கக்கூடிய எழுத்துகளே என்றும்,
பெரும்பாலும்
அவை திராவிட மொழியைச் சார்ந்-தவையே’என்றும் பேரா. முனைவர்
அய்ராவதம் மகாதேவன் இந்து நாளிதழில் (மே 3, 2009) மிக நீண்ட கட்டுரை
ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் ஆணித்தரமான சில கருத்துகளை வலியுறுத்தியுள்ளார்.
சிந்து வெளி
முத்திரைகளிலுள்ளவை படிக்கக் கூடிய எழுத்துகளே. அவை பெரும்பாலும் திராவிட மொழிக்
குடும்பத்தைச் சார்ந்தவையே.
அவை சிந்து
சம வெளியில் பழக்கத்திலிருந்த திராவிட மொழியான பிராகுவி மொழியைச் சார்ந்தவையே.
ரிக்வேதத்தில்
திராவிட மொழிச் சொற்கள் கடன் பெற்று சேர்க்கப்-பட்டுள்ளன.
பிராகிருத
மொழியில் திராவிட மொழியின் தாக்கம் உள்ளது.
சிந்துவெளி முத்திரைகளின்
தொகுப்-புகள் (ஹன்டர், பர்லோ, மகாதேவன்) சிந்துவெளி முத்திரைகளில்
காணப்-படும் மொழி திராவிட மொழி குடும்-பத்தைச் சார்ந்தவையே.
திராவிட மொழிக்
குடும்பத்தைச் சார்ந்தவை என்ற கருத்தை யூரி வெலன்டினோவிச் (ரஷ்யா) வால்டர்
ஃபேர் சர்விஸ் (அமெரிக்கா) போன்ற அறிஞர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர்.
சங்க
இலக்கியம் ‘வடுகர்’ என்று குறிப்பிடுவது (Vadugars
are the inhabitants of present day Karnataka) கன்ன-டர்களையே என்று செத்தார்
குறிப்பிட்-டுள்ளார். அதே சங்க இலக்கியம் வடுகரை ‘கல்லா
நீண்மொழிக் கதநாய் வடுகர்’ (அகம் _ களிற்றியானை. பாடல் 107)
(கல்வியில்லாத
நெடுமொழி கூறும் சினம் மிக்க நாயையுடைய வடுகர் என்று குறிப்பிடுகிறது.
சங்ககால வடுகர்தான் ‘கல்லா நீண் மொழியினர்’
என்றால் 21
ஆம்
நூற்றாண்டு வடுகரும் கல்லா நீண்மொழியர் தானோ-? நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்'
நாளிதழில்,
ஆதிமனிதன்
ஆசியாவில்தான் தோன்றினான் என்ற புதிய கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டுள்ளது. - 06
June 2012
உலகின்
முதல் கற்கோடாரி பல்லாவரம் (MADRAS)
அருகே
கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்து 1863 ஆம் ஆண்டு ஆங்கிலேய புவியியல் ஆராய்ச்சியாளர்
Bruce Foote (1916) வெளியிட்டார் (150
ஆண்டுகளுக்கு
முன்பு).