வியாழன், 29 நவம்பர், 2012

ஏழிலை



கப்பக்கிழங்கு என்று வழக்குமொழியில் வழங்கப்படும் ஏழிலைக் கிழங்கு பல சத்துகள் அடங்கிய கிழங்கு வகையாகும். அவித்துப் பொறித்து குழந்தைகளுக்கு வழங்கினால் அடம்பிடிக்காமல் சாப்பிடும் உணவு வகைகளில் இந்த கிழங்கும் ஒன்று. இந்த வாரம் ஏழிலைக் கிழங்கில் உள்ள சத்துகளை அறிவோம்...

ஏழிலைக் கிழங்கின் அறிவியல் பெயர் மனிகாட் எஸ்கலன்டா என்பதாகும். உருமாறிய வேரே ஏழிலைக் கிழங்காகும். தென் ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட ஏழிலைக் கிழங்கு தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா கண்டங்களில் பரவலாக உண்ணப்படும் உணவுப் பொருளில் ஒன்றாக உள்ளது. மனிகாட், டாபியோகா, யுகா, கஸ்ஸவா என பல பெயர்களில் இது வழங்கப்படுகிறது.

கிழங்கு வகைகளில் மாவுச்சத்து நிறைந்தது ஏழிலைக் கிழங்குதான். 100 கிராம் கிழங்கில் 160 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. இதில் சுக்ரோஸ் எனும் சர்க்கரை சத்து மிகுதியாக உள்ளது. மேலும் அமைலேஸ் என்ற கூட்டுச்சர்க்கரையும் கணிசமான அளவில் உள்ளது.

மிகக்குறைந்த கொழுப்புச் சத்து கொண்டது. மற்ற கிழங்குகளைவிட அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.

ஏழிலைக்கிழங்கில் குளுட்டன் இல்லாத புரதச்சத்து கிடைப்பது குறிப்பிடத்தக்கது. குளுட்டன் என்பது குழந்தைகளுக்கு சிலியாக் வியாதியை ஏற்படுத்தும் ஒருவித தானிய புரதமாகும். எனவே சிலியாக் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏழிலைக் கிழங்கால் சிறப்பு உணவுகள் தயாரித்து வழங்கப்படுவது உண்டு.

விட்டமின் கே நிறைந்திருக்கிறது. இது எலும்புகளின் உறுதித்தன்மைக்கு உதவும். மேலும் குழந்தைகளின் நரம்புமண்டல வளர்ச்சி, மூளைத்திறனுக்கு அத்தியாவசியமானது. அதனால்தான் அல்சீமர் எனும் ஞாபகமறதி வியாதிக்கு இது மருந்துப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

விட்டமின் பி காம்ப்ளக்ஸ், பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயமின் ஆகியவை அடங்கி உள்ளன.

தாது உப்புக்களான துத்தநாகம், மக்னீசியம், தாமிரம், அயர்ன், மாங்கனீசு போன்றவையும் ஏழிலைக் கிழங்கில் உள்ளது.

100
கிராம் கிழங்கில் 271 மில்லிகிராம் பொட்டாசியம் சத்து இருக்கிறது. இது சுரப்பிகள் நன்றாக வேலை செய்ய உதவும். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதிலும் பங்கெடுக்கும்.

செய்து சாப்பிடுங்கள்:

*
அண்டை மாநிலமான கேரளா உள்பட உலகநாடுகள் பலவற்றில் ஏழிலைக் கிழங்கால் பல்வேறு உணவுப் பண்டங்கள் தயாரித்து சாப்பிடப்படுகிறது.

*
தமிழகத்தில் கிழங்கை அவித்து, பொறித்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.

*
ஏழிலைக் கிழங்கு சிப்ஸ் நல்ல சுவையாக இருக்கும்.

*
மீனுடன் சேர்த்து பொறித்து சாப்பிடுவது, கேக், பிஸ்கட், கூழ் என விதவிதமான பதார்த்தங்கள் செய்து சாப்பிடுகிறார்கள்.

வியாழன், 22 நவம்பர், 2012

தமிழ்நிலை

தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும். இத்தமிழ் மொழிக்கு வரி வடிவம் அதாவது எழுத்து உருவம் என்று உருவானது? என்ற வினாவிற்குச் சரியான விடை கிடைக்கவில்லை. தற்சமயம் நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்களைக் கொண்டு சில மொழி வழி உண்மையை உணர்கிறோம். இன்று நாம் பேசும் தமிழ்மொழி பல கால கட்டங்களில் பல மொழிகளோடு இணைந்து பல உருக்கள் மாறி இறுதி நிலையில் காண்கிறோம். ஆனால் தொல் கால இந்திய எழுத்து முறையை ஆராய்ச்சியாளர்கள் தமிழெழுத்து முறை மற்ற இந்திய எழுத்து முறைகளைக்குத் தாய் பெருங்குரல் கொடுக்கிறார்கள் அறிஞர்கள் பூலரும், ஐராவதம் மகாதேவன் அவர்களும்.
தமிழ் வட்டெழுத்து
தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் மிகமிகத் தொன்மை வாய்ந்தது வட்டெழுத்து முறையே! வளைந்த கோடுகள் அவ்வெழுத்து முறையில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதால் அம்முறைக்கு வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது. இதன் அடிப்படையில் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் கோலெழுத்துக்கள் அல்லதுமலையாண்மாஎன்ற எழுத்து முறை உருவானது. இக்கோலெழுத்துகள் செப்பேடுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் எழுதப்பட்டன. அக்கோலெழுத்துக்களே ஆங்காங்கே கிடைத்துள்ள கல்வெட்டுக்களிலும், நடு கற்களிலும் தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்தாக உருமாறி மலர்ந்து வளர்ந்தது என இரா. நாகசாமி அவர்கள் மார் தட்டிக் கூறுகிறார்.
வட்டெழுத்தின் தோற்றம்
வட்டெழுத்துக்களின் ஆரம்ப நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு, நடுகற்களே சரியான சாட்சிகள். நடுகற்கள், நடப்பட்ட கற்களைத் தான் நடுகற்கள் என்று வரலாற்று மேதைகள் கூறுகின்றனர். அதன் வாயிலாகத் தமிழ் வட்டெழுத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. தமிழ் பிராமியில் புழக்கத்திலிருந்ததமிழ்எழுத்துக்கள் தான் தமிழ் வட்டெழுத்தாக மாறி வளரத் தொடங்கியது என வரலாறு ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
கி.பி. 3 - ஆம் நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்தானது தமிழ்ப் பிராமியிலிருந்து பிரியத் தொடங்கியது. பிராமியிலிருந்து பிரியத் தொடங்கிய வட்டெழுத்துக்கள் நாளடைவில் சிறுகச் சிறுக வளர்ந்து கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தனித்தன்மை பெற்றது எனலாம்.
அன்று செந்தமிழ் நாடு எனப் போற்றப்பட்ட பாண்டிய நாடுதன்னார் தமிழ் அளிக்கும் தென் பாண்டி நாடுஎன மாணிக்கவாசகரால் பாராட்டப்பட்டது. தமிழை வளர்த்த பாண்டியர்கள் வட்டெழுத்து முறைக்கு ஊக்கம் காட்டினர். கொடுந்தமிழை மேற்கொண்ட சேரர்களும் வட்டெழுத்தில் ஆர்வம் காட்டினர். இரு நாட்டிலும் வட்டெழுத்தில் அரசுச் சாசனங்கள் எழுதப்பட்டன என்றால் அதன் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ளுங்கள்.
வட்டெழுத்துப் பகுதிகள்
தமிழ் வட்டெழுத்து தமிழகம் முழுவதிலும் பரவிச் செயல்முறையில் இருந்தது. தமிழகப் பகுதிகளாகிய மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், கோவை, சேலம், வடாற்காடு, தென் ஆற்காடு, செங்கற்பட்டு போன்ற பகுதிகளிலும் பரவியிருந்தது. கொங்கு நாட்டு மன்னர்களின் சாசனங்களிலும் தமிழ் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.

தமிழ்க்கோலெழுத்துக்கள் - “மலையாண்மா
பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் பல நூற்றாண்டுகள் கொடி கட்டிப்பறந்த வட்டெழுத்துக்கள் நாள்பட நாள்பட அவை ஒழுங்கு முறையில் எழுதப்படாமல் உருமாற்றங்களைப்பெற்று தமிழ் வட்டெழுத்து ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. இவ்வெழுத்து முறையைத்தான் திருவாங்கூர் போன்ற கேரளப் பகுதிகளில்மலையாண்மாஎன்றும்கோலெழுத்துஎன்றும் அழைக்கலாயினர். சோழர்களின் ஆட்சிக் காலத்தில் வட்டெழுத்து குறையத்தொடங்கியது. ஆனால் சேர நாட்டில் கி.பி. 1663 வரை நிலைத்திருந்தது என திரு. டி.. கோபிநாதராவ் கூறுகிறார்.
வட்டெழுத்து வீழ்ச்சசி
பாண்டிய நாட்டில் மிகச் செல்வாக்குடன் ஓங்கி வளர்ந்த பாண்டிய நாட்டை வென்ற சோழர்கள் தமிழ் வட்டெழுத்துக்களை ஆதரிக்கவில்லை. முதலாம் பராந்தகச்சோழன் முதலாம் இராசராசன் காலம் வரையாண்ட சோழர்கள் வட்டெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து பாண்டியர் பகுதிகளில் மறைந்துவிட்டது.

தமிழ்க் கிரந்தம் உதயம்
தென் இந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் வைத்தாண்ட சோழர்கள் காலத்தில் தமிழ் வட்டெழுத்து மங்கி கிரந்தத் தமிழ் மேலோங்கியது. பல்லவர்களால் போற்றி வளர்க்கப்பட்டபிராமிலிபியின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும் வழக்காறு பெற்றது. சோழ மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. வட்டெழுத்துக்கள் மறைந்து கிரந்தத் தமிழ் தலை தூக்கியது.
தமிழ் இலக்கியங்கள்
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்எனப் புகழப்படும் தமிழ் உலகில் பல விலக்கியங்கள் தற்பொழுது தமிழகத்தில் தமிழ் பற்றும் புத்துணர்வும், மொழித் தூய்மையும், ஒழுங்கு முறை எழுத்து வடிவமைப்பும் அமையக் காரணங்களாக அமைகின்றது. இலக்கியங்கள் அனைத்துமே பெரும்பாலும் 1. முதற்பொருள், 2. கருப்பொருள், 3. உரிப்பொருள், என வகைப் படுத்தப்பட்டுள்ளன.
நம் தமிழ் மொழி இலக்கிய வளம் பெற்ற மொழியாகும். இலக்கியங்களும் இலக்கண நூல்களும் பெருகி இருந்தமையால் தமிழ்மொழி திருந்திய மொழியாக, திருத்தம் செய்யப்பட்ட மொழியாக, ஒழுங்கு படுத்தப்பட்ட மொழியாகச் சிறப்புற்றது. இலக்கண மரபுகளைத் தகுத்து ஒழுங்குபடுத்திஎழுத்து”, “சொல்”, “பொருள்என்ற மூன்று தலைப்புக்கள் ஒலியைக் குறிக்கும் குறில், நெடில், ஆய்தம், இகரம், உகரம் போன்ற அனைத்துத் தமிழ் இலக்கண நெறிகளை நாம் அறிவோம்.
தமிழ் மொழியின் நான்கு நிலைகள்
1. பண்டைத் தமிழ் நிலை
2.
காப்பியக்காலத் தமிழ் நிலை
3.
இடைக்காலத் தமிழ் நிலை
4.
தற்காலத் தமிழ் நிலை
என நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள்,
பண்டையத் தமிழை அறியத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் உதவுகின்றன.
இடைக்காலத் தமிழை அறியத் தேவாரம், திவ்யப்பிரபந்தம், சிந்தாமணி போன்ற இலக்கியங்கள் உதவுகின்றன.
தற்காலத் தமிழ்நிலையை, நன்னூலுக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் மற்றும் பேச்சு வழக்குத் தமிழ் கொண்டும் தெரிய முடிகிறது.
ஒலியாகத் திரிந்து, சித்திரமாய் மாறி, பலமொழிகளுடன் இணைந்து உருக்கள் பலப், பல எடுத்து, காலம் பல கடந்து, கல்வெட்டுகளில் உராய்ந்து, செப்பேடுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் தோய்ந்து, வெள்ளைக் காகிதத்தில் வீரநடை போடும் தேன்தமிழ் மொழியே நம் தாய்த் தமிழ்.
என்றும், மழலையாய், குன்றாச் சிறப்புடன் தேன் சுவையொத்த, தமிழாம் கன்னியை முன்னோன் தன் கருவினில் சுமந்து, மகவாய் ஈன்று, மழலையாய் வளர்த்து, குமரியாய்ப் போற்றிக்காத்து நம்மிடம் விட்டுச் சென்றான். அன்னவள் விரிந்த கூந்தலை வாரிப் பின்னலிட்டு, மலர் வைத்து அன்புடன் அழகு பார்த்தல் நம் கடமையல்லவா? அழகு பார்க்க எவரும் துணியாதது ஏன்? என்பதுதான் புதிராக உள்ளது.
- அக் என்னும் ஆயுத எழுத்து

அகரக்குறிலொலி துவக்கத்திலெழுப்ப
இக்கென மெய்யொலி இறுதியில் முடிக்க
அக்கென எழும்புமாயுத ஒலியை
மும்முற்றுப்புள்ளிகளெங்கனம் ஒலிக்கும்?
ஒலியே! இல்லா பிற ஒலி திருடும்
அவல நிலையைப் போக்கலாமெண்ணி
மும் முற்றுப் புள்ளியை நீக்கலும் சரியே!

http://www.santhan.com