சனி, 15 டிசம்பர், 2012

தமிழ் மொழியில் எழுத்து பிறக்கும் வகைகள்



1. இதழ்களில் பிறக்கும் எழுத்துகள். (Labials)             ப வ ம

2. பற்களைத் தொட்டுப் பிறக்கும் எழுத்துகள். (Dentals)        

3. முன் அண்ணத்தைத் தொட்டுப் பிறக்கும் எழுத்துகள். (Palatals)      ச ஞ ய

4. பின் அண்ணத்தைத் தொட்டுப் பிறக்கும் எழுத்துகள். (Velar Sounds)      

5. உள் நாக்கில் பிறக்கும் எழுத்துகள். ( Uvular Sounds)          

6. நாக்கை வளைத்துப் பிறக்கும் எழுத்துகள். ( Cacuminals)          
 இலக்கிய மின்றேல் இலக்கண மின்றே
  எள்ளின் றாகின் எண்ணெயு மின்றே
  எள்ளினின்(று) எண்ணெய் எடுப்பது போல்
  இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்.         (அகத்திய சூத்திரம்)

             எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கு முன், அதனை வழங்கும் எட்செடி இருந்தாக வேண்டும். அச்செடியானது முளைத்துப் பருவப்பட்டு வளர்ந்த பின்னரே எள் காய்க்க முடியும். எள்ளுக்காய் உருவெடுப்பதற்குப் பருவத்தால் எட்செடியில் பூவர  வேண்டும். பூ வந்த பின் வளர்ச்சிக் கட்டங்கள் நிறைந்து காய்முற்றினால்தான் எள் கிடைக்கும்.

            இப்படியாக; எள் கிடைத்த பின் அதனைச் செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுக்க முடியும். ஒரு தாய்மொழியின் தனித்தன்மையான மொழியியல் அமைப்புகளும் அது பற்றிய சிந்தனைகளின் எண்ணித் துணிந்த கொள்முடிபுகளும் அறிவியல் - வரலாற்று முறையில் இதுபோலத்தான் உருவாகின்றன.
           அவ்வகையில் மேற்கண்ட அகத்தியச் சூத்திரம் மிக எளிமையாக எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்படும் உவமையின் வாயிலாக மொழியின் உருவாக்கத்தை உருவகப்படுத்திக் காட்டியிருப்பதானது நாம் எண்ணி எண்ணி இறும்பூது எய்தத்தக்கதாகும்.

           ஒரு தாய்மொழிக்கு அதனையுடைய மக்கள் (இனம்) இல்லாமல் இயக்கமில்லை. அஃது, அதற்குரிய மக்களோடு உள்ளும் புறமும் இயைந்து இயங்கும் இயல்பு பெற்றது. அவ்வகை இயங்குவதால் வாழ்க்கை எனப்படுகிறது.  அந்த இயங்குதலாகிய வாழ்க்கையின் நடப்பிலிருந்து வாழ்வியலும் வாழ்வியலிருந்து வழக்காறுகளும் தோன்றுகின்றன.

           தோன்றிய வழக்காறுகள் ஒரு தாய்மொழியில் ஊன்றி நிற்கின்றன. மக்களின் வாய்வழக்கிலும் கற்றுவல்ல சான்றோர்களின் நெறி செய்த ஏட்டு வழக்கிலும் அவை வழங்குகின்றன ( இயங்குகின்றன). அவை ஒரு தலைமுறையோடு ஒழிந்து போகாமல் அவ்வினத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் வழிகாட்டியாகி ஓங்கி ஆட்சி செய்கின்றன. அவற்றின் வழிதான் தனக்கேயுரிய ஒரு தனித்தன்மையான தோற்றத்தை அவ்வினம் பெற்று வருகின்றது.
             வாழ்வு என்னும் அத்தொடர்ச் செலவில், அம்மொழிக்குப் பிறப்பால் வழிவழி உரிமை பெற்ற மக்களால் உற்றும் உணர்ந்தும் பெறப்படும் அறிவுணர்வுத் துய்ப்புகளிலிருந்து உருவாகுவதே இலக்கியம். மனத்தின் இயல்புக்கூறுகள் சுவையாக்கிச் சொல்லாக்கிச் சொல்வடித்த ஓவியமாகி மீண்டும் பயின்று துய்க்கும் உள்ளத்தில் உயிர்ப்பைச் சுரப்பது இலக்கியம். உள்ளத்தைப் புதுக்கி உயரவல்லார்க்கு எதிர்கால வாழ்வின் வடிவத்தை உலக  இயற்கையில் கணித்துக் கவனமாகச் செதுக்குவது இலக்கியம்.
             அத்தகைய உயிர்ப்பான மொழிக்குள்ளும் அதன் உயர்ந்த அடைவு வடிவமான இலக்கியத்துக்குள்ளும் அமைந்து இயங்குகின்ற வாழ்வின் பாங்குகளை இழைத்துணர்ந்து கண்ட வரம்புகளின் வெளிப்பாடே இலக்கணம்.

          இவ்வாறு, காலந்தோறும் வாழையடி வாழைப் போல் தமிழ்மொழியின் இயங்கும் ஒழுங்குகளை ஆராய்ந்து கண்டறிந்த மொழியியல் முனைவர்கள் சான்றுடன் நிறுவிக் காட்டிய காரண விளக்கங்களே தொல்காப்பியம், நன்னூல் முதலிய எண்ணற்ற இலக்கண நூல்கள்.

               தமிழ் இலக்கண வரலாறு, ஓர் உண்மையை உள்ளது உள்ளபடியே உடைபடமாலும் தடைபாடமலும் உரைக்கின்றது. கண்டு காட்டப் பெற்ற இலக்கண கூறுகளுள் சிலவன திருத்தப் பெற்றும்; சிலவன தவிர்க்கப் பெற்றும்; சிலவன புதுக்கப் பெற்றும்; சிலவன தழுவப்பெற்றும்; சிலவன புதிதாய்க் கண்டு காட்டப்பெற்றும் வந்துள்ளன. அவற்றுள் காலப்பெறுங்கடலில் கலங்கரை விளக்கங்களாக நின்று நிலைத்தவற்றுள் தலையாயவை தொல்கப்பியமும் நன்னூலுமே ஆகும். பிறவெல்லாம் பெரும்பபாளும் இவற்றின் சாயல்களே.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

கரிகால் சோழன்



கரிகால் சோழன்-thanks-puthuthinnai.com
சோழ மன்னர்களில் மிகச் சிறந்தவன் கரிகாற்சோழன். சிலப்பதிகாரத்தில்கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன் என்று கீழ் கண்ட வரிகளின் மூலம் கூறப்படுகிறது.
பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென
இமையவர் உறையும் சிமயப் பீடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற்
மற்றுமொரு இலக்கியக்குறிப்பு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இயற்றப்பட்ட நூலாகிய செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியில் காணப்படுகிறது.
செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச்
சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்
பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே.
என்று இராச பாரம்பரியம், இமயத்தில் புலிக்கொடி என்ற பகுதியில் செயங்கொண்டார் இவ்வாறு குறிப்பிடுவார்.
சேக்கிழார் பெருமான்  திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், செய்யுள் 85 இல், வல்லார்வாய்க் கேட்டணர்ந்த செய்தியாக; கரிகாலன் இமயம் செல்லும்பொழுது வேடன் ஒருவன் எதிர்ப்பட்டுக் காஞ்சி நகரத்தின் வளமையைக்கூற, அப் பேரரசன் அந்நகரத்தைத்  தனதாக்கிக் குன்று போன்ற மதிலை எழுப்பிப் பலரைக் குடியிருத்தினன் எனக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பு இரண்டாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்தது
தமிழ் மன்னர்களில் கரிகாலனும், செங்குட்டுவனும் இமயம் வரை சென்றதாக இலக்கியங்களின் வாயிலாக அறியப்படுகிறார்கள்.  இவர்கள் காலம் கடைச்சங்க காலமாக (கி.மு. 250 – கி.பி. 250 வரை) கருதப்படுகிறது.
தமிழ் மன்னர்களின் இமயத்தை நோக்கிய பயணத்தை ஆராய்ந்த அறிஞர்களில் ஆராவமுதன் என்பவர் தமது நூலில் அவர்களது பயணத்திற்கு சாதகமான சூழ்நிலை, அதாவது எதிர்ப்புகள் குறைந்த வலிமையற்ற வடநாட்டு மன்னர்களின் காலமாக இருக்கக்கூடும் என்று முடிவு செய்து,
1.
அசோகனுக்கு பிற்பட்ட மௌரியர் காலம் (கி.மு. 232 – கி.மு. 184)
2.
புஷ்யமித்திர சுங்காவுக்குப் பிற்பட்ட காலம் (கி.மு. 148 – கி. மு. 27)
3.
ஆந்திரர் ஆட்சி குன்றிய காலம் (கி.பி. 163 – 300)
என்ற காலங்களைக் குறிப்பிட்டார்.
இத்தகவல் ராசமாணிக்கனார் அவர்களது ’பல்லவர் வரலாறு’ என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.  இதில் செங்குட்டுவன் இமயம் சென்ற காலம் கி.பி. 166 – 193 இக்கு இடைப்பட்ட காலம் என ஆராய்ச்சியின் மூலம் முடிவுக்கு வருகிறார்  ராசமாணிக்கனார்.  இராசமாணிக்கனாரின் நூலை தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் பெறலாம் (http://www.tamilvu.org/library/nationalized/pdf/53-RASAMANICKAM/PALLAVARVARALARU.pdf).
அது போலவே, கரிகாலன் இமயம் சென்றது கி.மு. 44 – கி. மு. 17 க்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளுக்குள் இருக்கக்கூடும் எனவும் திரு. ராசமாணிக்கனார் கருதுகிறார்.
மேலும், கரிகாலன் படைஎடுத்த காலமாக கருதப்படும் காலத்தில், கண்வ மரபினர் மகத நாட்டை ஆண்டவர்கள், அவர்கள் வலிமையற்ற மன்னர்களாக இருந்திருக்கிறார்கள் என்று V.A. Smith’s “Early History of India” pp.215, 216 என்ற நூலில் காணப்படும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்.
 http://puthu.thinnai.com/wp-content/uploads/2012/09/india_map-267x300.gif
அத்துடன்கலைமகள் (1932) தொகுதி 1. பக்கங்கள் 62-63 இல் வெளியான ராவ்சாகிப் மு. ராசுவையங்கார் என்பவர் கட்டுரையில்,  “சிக்கிம் நாட்டுக்குக் கிழக்கே அதற்கும் திபேத்துக்கும் உள்ள எல்லையை வரையறுத்து நிற்கும் மலைத் தொடருக்கு சோல மலைத்தொடர் (Chola Range) என்றும், அதனை அடுத்துள்ள பெருங்கணவாய்க்கு சோல கணவாய் (Chola Pass) என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. சோலஎன்பதும் சிக்கிம், திபெத் மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருந்தவில்லைஎன்று குறிப்பிட்டதை புதிய சான்றாக கருதலாம் எனவும் ராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். இக்குறிப்பு காணப்படுவது பக்கம் 9, ‘பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்என்ற அத்தியாயத்தில்.
சோல மலைத்தொடர்:
இத்தகவலைப் படித்தபின்பு இணையத்தில் கூகிள் வரைபடத்தில் Chola Range என்ற இடத்தைப் பார்க்கும் ஆவலில் தேடினேன்.  அப்பொழுது Chola Range பற்றி மேலும் பல தகவல்கள் விக்கிபீடியாவிலும் கிடைத்தன.
The Chola range is situated on the Sikkim and Bhutan border. The highest peak is Rishila. The town of Kalimpong is situated in this region. Neora Valley National Park is located here.
(Ref:   http://en.wikipedia.org/wiki/Darjeeling_Himalayan_hill_region)
இந்த மலைத்தொடர், கிழக்கு இமயமலைச் சாரலில், இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான காங்க்டோக் (Gangtok, the capital of the Indian state of Sikkim) நகருக்கு கிழக்கே அமைந்துள்ளது.  இந்த மலைத்தொடர் சிக்கிம்-திபெத்தின்(சீனா) எல்லையாகவும், சிக்கிம்-பூடான் நாட்டின் எல்லையாகவும் அமையப்பெற்றுள்ளது.  இந்திய வரைபடத்தையும் , இத்தகவல்கள் குறிக்கப்பட்ட கூகிள் வரைபடத்தை கீழே காண்க.
 http://puthu.thinnai.com/wp-content/uploads/2012/09/Chola-Range1-300x173.jpg
சோல மலைத்தொடர் ‘, ‘சோல ஏரி’, ‘சோல கணவாய்மற்றும் சோல சிகரம்ஆகியைவையும் சிக்கிம் பகுதியில் உள்ளது.  சோல கணவாய் (Chola Pass) கடல் மட்டத்தில் இருந்து 15,000 அடி உயரத்தில் உள்ளன.  சோல கணவாய்  சிக்கிமிலிருந்து திபெத்திற்கு செல்லும் வழியில் உள்ளது.  சமீபகாலமாக மலை ஏறுவதில் விருப்பமுடையோரிடம் புகழ் பெற்ற இடமாகவும் அது மாறி வருகிறது.  சோல கணவாய் (Chola Pass) பற்றி யுடியூபில்’ (YouTube) பல காணொளிகள் காணக் கிடைக்கின்றன.
Chola Range மற்றும் Chola Pass ஒளிப்படங்களைப் பார்க்க ஃபிலிக்கர் தளத்தில் பலர் வெளியிட்டுள்ள படங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் வழியே சென்று பார்க்கலாம்.
சோலமலை என்ற பெயர் வரக் காரணம் என்ன?
சோலஎன்ற பெயர் நம் தமிழக கரிகால் பெருவளத்தான் இமயம் சென்றதால் வந்தது என்று சொல்ல விரும்புவதில் நமக்கு அதிக ஆர்வம் இருக்கக் கூடும்.  ஆனால் உண்மை என்ன என்பதையும் ஆராய வேண்டும்.  ‘சோலஎன்ற பதத்தின் பொருள் என்ன? அது எதைக் குறிக்கக் கூடும்? என்று ஆராய்ந்ததில் அதைக்குறித்து பல கருத்துக்கள் உள்ளது என்பதும் தெரிய வருகிறது.
சோலஎன்ற சொல் திபெத்தியர்களால் ஜோலஎன உச்சரிக்கப் பெறும் என்றும், அதற்கு திபெத்திய மொழியில் பனிமலைஎன்ற பொருள் என்றும் கருதப்படுகிறது.  மற்றுமொரு கருத்து  ‘சோலஎன்பதை சீனர்கள் தங்கள் உச்சரிப்பின் அடிப்படையில் ஒலிக்கேற்ற எழுத்துக்களால் அவர்கள் மொழியில் குறித்ததாகவும், ஆனால் அதே எழுத்துக்கள் உள்ள வார்த்தை அவர்கள் மொழியில் பறவையைக் குறித்தபொழுது நாளடைவில் அந்தச்சொல் பறவை மலைஎனப் பொருள்படும்படி ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
என்ற ஒலியில் முடியும் பல பெயர்கள் அம்மலைப்பகுதியில் உள்ளது. உதாரணமாக, சிக்கிமின் கிழக்கு எல்லையில் உள்ளது சோல மலைத்தொடர்; அது போலவே சிக்கிமின் மேற்கு எல்லைப் பகுதியில் உள்ள மலைத்தொடருக்கு சிங்கலில’ (Singalila) என்று பெயர்.  அப்பகுதியில் உள்ள முக்கியமான கணவாய்களுக்கு நதுப் லமற்றும் ஜலேப் ல’  (Nathu La and Jelep La) என்ற பெயர்களும் உள்ளன.  எனவே என்ற பதம் மலைக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையாத இருக்கலாம்.  அவ்விடத்திற்கு  அருகில் உள்ள திபெத், நேப்பால், பூடான், வங்க  தேசத்து மொழிகளிலோ; அல்லது சிக்கிம் பகுதிகளில் வழங்கும் பற்பல மொழிகளில்  (languages spoken in Sikkim: Nepali, Bhutia, Lepcha, Limbu, Newari, Kulung, Gurung, Mangar, Sherpa, Tamang and Sunwar) ஏதோ ஒன்றில் மலைப் பகுதிக்கு தொடர்பு படுத்தும் வகையில் குறிப்பிடப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகத் தோன்றுகிறது.
சர். ரிச்சர்ட் ராபர்ட் என்பவர் தன்னுடைய புவியியல் ஆராய்சிக் கட்டுரையில் குறிப்பிடுவதை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். அவர் சோலஎன்பதில் உச்சரிப்புக் கோளாறு இருக்கக் கூடும் என்று கருதுகிறார்.  மொழி தெரியாத அந்நியர்கள் தவறாக உச்சரித்ததால் அச்சொல் சிதைந்திருக்கும் என்பது அவர் கருத்து. அத்துடன் என்பது திபெத்திய மொழியில் கணவாயைக் குறிக்கும் சொல், ‘சோஎன்பது நீர்நிலையை அல்லது ஏரியைக் குறிப்பது என்றும் கூறிகிறார்.  இவரது விவாதத்திற்கு அப்பகுதி மக்களிடமோ அல்லது மற்றவரிடமோ  வேறு மாற்றுக் கருத்து உள்ளதா என்பது தெரியவில்லை.
“…Tso is a common termination in Tibetan names, meaning water, and is sometimes pronounced tcho;  in fact, Europeans cannot tell whether natives are saying tso or tcho. It merely means a lake. Nimyetso is Nimye Lake. And I ought to take this opportunity of mentioning that the termination la means a pass, so that Chola, or Cho-la merely means lake-pass, and Yakla, or Yak-la, is nothing more than the pass
of the Yak, the famous Tibetan cow…. (p. 334)”
Reference: Proceedings of the Royal Geographical Society and monthly record of Geography, Volume 3, 1881. Chapter: Lake Region of Sikkim, on the Frontier of Tibet, by Sir Richard Temple(p. 334). By Royal Geographical Society (Great Britain).
This document accessible at: this link
எனவே, சோலமலையில் உள்ள சோலஎன்பது சோழர்களைக் குறிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாத் தோன்றுகிறது. கரிகால் வளவன் இமயம் சென்றதாகக் கருதப் படும் காலத்திலிருந்து ஏறத்தாழ ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகள் கடந்த பின்பும் சோழர் பெயர் அங்கு நிலைத்திருப்பதாக சொல்ல விரும்பினால் அதனை தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நம்மால் நிரூபிக்க முடியும்.
அப்பகுதியில் டைகர் ஹில்’ (Tiger Hill) என்ற மலைச்சிகரம் ஒன்று உள்ளது.  அது சோழர் சின்னமாகிய புலியைக் குறிக்க வாய்ப்பிருப்பதாக கருதுவதைவிட, அருகில் உள்ள புலிகளுக்கு புகழ் பெற்ற வங்க மாநிலத்துடன் அதற்கு உள்ள தொடர்பு அதிகம் இருப்பதாக மாற்றுக் கருத்து எழுந்தால் மறுக்க முடியாது. கரிகால் வளவன் இமயம் சென்றதை நிரூபிக்க மேலும் உறுதியான ஆதாரம் நமக்கு வேண்டும்.