சுவடியியல் துறை தமிழர்களின் வரலாற்றோடும் வாழ்வியலோடும் நெருங்கியத்
தொடர்புடையது.
நமது மலேசியாவில் சுவடியியல் பற்றிய
அறிகையானது அறவே இல்லை எனும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. அது தமிழக மக்களுக்கே உரியது என்ற எண்ணமும்
நம்மிடையே
உள்ளது.
ஆனால், நமது மலேசியத் தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்கள் சிலரும் சுவடியியல் துறையில் ஆழ்ந்து ஈடுபட்டு தமிழ்நாடு வரையில் சென்று, ஆய்வுகள் நடத்தி வருகின்றனர் என்றால் பெரும்பாலோருக்கு வியப்பாக இருக்கலாம். ஓலைச்சுவடிகள் குறித்த ஆய்வில் கண்ட உண்மைகளையும் அரிய தகவல்களையும் மலேசியத் தமிழர்களுக்குப் பரப்பும் எண்ணத்தில் ஒரு மாபெரும் நிகழ்ச்சி கோலாலம்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக