ஞாயிறு, 25 டிசம்பர், 2011
கன்னியாகுமரியில் உள்ள தூய தமிழ் சொல்கள்
கன்னியாகுமரியில் உள்ள தூய தமிழ் சொல்கள் (Pure Thamizh(Tamil)) words from kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூய தமிழ் சொல்கள் நாம் பல நேரத்தில் இவற்றை மலையாளம் என்று கருதுவோம்.
சாடு – பாய் (பாய்தல்) ஆதாரம்: காண்க பாடல் 1 (அரிச்சந்திர புராணத்திலிருந்து)
உணக்கல் – காய செய்தல் ஆதாரம்: காண்க பாடல் 2 (திருக்குறள்)
தகராறு – (ப்ரச்சனை என்று வடமொழியில் பலர் இதை கூறுவார்)
அலத்தல், அலப்பு – பேராசை, ஆசைநோய் – ஆதாரம்: காண்க பாடல் 3 (திருக்குறள்)
பீடு – பெருமிதம் ஆதாரம்: காண்க பாடல் 4 (திருக்குறள்)
பீலி – மயிலிறகு, இறகு ஆதாரம்: காண்க பாடல் 5 (திருக்குறள்)
ஓர்மை – உணர்வு, கருத்து, ஞாபகம். ஆதாரம்: காண்க பாடல் 6 (திருக்குறள்)
உறைப்பு – திண்ணம் (நிச்சயம்), ஆதாரம்: காண்க பாடல் 7 (பெரியபுராணம்)
அற்றம் – இறுதி, முடிவு, கரை ஆதாரம்: காண்க பாடல் 8 (திருக்குறள்)
அங்கணம் – உள்முற்றம், கழிவுநீர் மடை ஆதாரம்: காண்க பாடல் 9 (திருக்குறள்)
வெதுப்பு – சூடாக்கு ஆதாரம்: காண்க பாடல் 10 (கம்பராமாயணம்)
பாடல் 1
அதிபார தனபார அதிரூப மலர்மானை அனையாய் இவன்
நதிபாய உயர்போதின் நறைபாய நிறையாத சிறை வாவியில்
மதியாமல் வலைபீறி வேடிபோன பருவாளை வளைபூ கமேல்
குதிபாய மாடல்கீறி விழுதேறல் கரைசாடு குடநா டனே
- அரிச்சந்திர புராணம் 322
பாடல் 2
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
- திருக்குறள்
பாடல் 3
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்
- திருக்குறள் 1303
பாடல் 4
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை
- திருக்குறள் 1014
பாடல் 5
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
- திருக்குறள் 475
பாடல் 6
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
பாடல் 7
நின்றமறை யோர்கேளா நிலையழிந்த சிந்தையராய்
நன்றருளிச் செய்திலீர் நாணிலமண் பதகருடன்
ஒன்ரியாயமன் னவன்சூழ்ச்சி திருத்தொண்டி நுறைப்பாலே
வென்றவர்தந் திருபேரோ வேறொருபேர் எனவெகுள்வார்
- பெரியபுராணம் 1795
பாடல் 8
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
- திருக்குறள் 421
பாடல் 9
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொள
- திருக்குறள் 720
பாடல் 10
வந்து கார் மழை தோன்றினும், மா மணிக்
கந்து காணினும், கைத்தலம் கூப்புமால்;
இந்து காந்தத்தின் ஈர நெடுங் கலும்
வெந்த காந்த, வெதுப்புறு மேனியாள்
- கம்பராமாயணம் 2811
திரிந்த தமிழ்சொல்கள்
சவுட்டு = சுவட்டு(சுவடு ஏற்படச்செய்) –> சவுட்டு(அகர உகர இடமாற்றம்)
• போல்மம்: மிஞிறு = ஞிமிறு;
ஒலுங்கு = கொசுகு
துறையல் = திறவுகோல் –> துறையல்
தாக்கோல் = தாழ்கோல் –> தாக்கோல்
சாணாங்கி = சாணகம் –> சாணாங்கி
உச்சை = உச்சி பொழுது –> உச்சை பொழுது –> உச்சை
வெள்ளனே = காலையிலே
சால்ரா
வண்ணம் = பருமன் (நிறம் எனும் பொருள் தவறானது வடமொழியான வர்ணத்திலிருந்து வந்தது)
• இதற்கு பொருட்டு என்று பொருள் உண்டு
• பொருட்டாக கொள்ளப்படும் அளவிற்கு பருமன் உடையது எனும்பொருளில் வண்ணம் எனும் கையாளப்படுகிறது
• ஓரளவிற்கு பருமனோ மதிப்போ இருந்தாலொழிய மக்கள் எதையும் பொருட்டே கொள்ளார்
.... இங்கே பதியப்பட்டது கசடற தமிழ் கற்போம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக