ஞாயிறு, 25 டிசம்பர், 2011

கன்னியாகுமரியில் உள்ள தூய தமிழ் சொல்கள்

கன்னியாகுமரியில் உள்ள தூய தமிழ் சொல்கள் (Pure Thamizh(Tamil)) words from kanniyakumari கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூய தமிழ் சொல்கள் நாம் பல நேரத்தில் இவற்றை மலையாளம் என்று கருதுவோம். சாடு – பாய் (பாய்தல்) ஆதாரம்: காண்க பாடல் 1 (அரிச்சந்திர புராணத்திலிருந்து) உணக்கல் – காய செய்தல் ஆதாரம்: காண்க பாடல் 2 (திருக்குறள்) தகராறு – (ப்ரச்சனை என்று வடமொழியில் பலர் இதை கூறுவார்) அலத்தல், அலப்பு – பேராசை, ஆசைநோய் – ஆதாரம்: காண்க பாடல் 3 (திருக்குறள்) பீடு – பெருமிதம் ஆதாரம்: காண்க பாடல் 4 (திருக்குறள்) பீலி – மயிலிறகு, இறகு ஆதாரம்: காண்க பாடல் 5 (திருக்குறள்) ஓர்மை – உணர்வு, கருத்து, ஞாபகம். ஆதாரம்: காண்க பாடல் 6 (திருக்குறள்) உறைப்பு – திண்ணம் (நிச்சயம்), ஆதாரம்: காண்க பாடல் 7 (பெரியபுராணம்) அற்றம் – இறுதி, முடிவு, கரை ஆதாரம்: காண்க பாடல் 8 (திருக்குறள்) அங்கணம் – உள்முற்றம், கழிவுநீர் மடை ஆதாரம்: காண்க பாடல் 9 (திருக்குறள்) வெதுப்பு – சூடாக்கு ஆதாரம்: காண்க பாடல் 10 (கம்பராமாயணம்) பாடல் 1 அதிபார தனபார அதிரூப மலர்மானை அனையாய் இவன் நதிபாய உயர்போதின் நறைபாய நிறையாத சிறை வாவியில் மதியாமல் வலைபீறி வேடிபோன பருவாளை வளைபூ கமேல் குதிபாய மாடல்கீறி விழுதேறல் கரைசாடு குடநா டனே - அரிச்சந்திர புராணம் 322 பாடல் 2 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். - திருக்குறள் பாடல் 3 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் - திருக்குறள் 1303 பாடல் 4 அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை - திருக்குறள் 1014 பாடல் 5 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். - திருக்குறள் 475 பாடல் 6 ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. பாடல் 7 நின்றமறை யோர்கேளா நிலையழிந்த சிந்தையராய் நன்றருளிச் செய்திலீர் நாணிலமண் பதகருடன் ஒன்ரியாயமன் னவன்சூழ்ச்சி திருத்தொண்டி நுறைப்பாலே வென்றவர்தந் திருபேரோ வேறொருபேர் எனவெகுள்வார் - பெரியபுராணம் 1795 பாடல் 8 அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் - திருக்குறள் 421 பாடல் 9 அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொள - திருக்குறள் 720 பாடல் 10 வந்து கார் மழை தோன்றினும், மா மணிக் கந்து காணினும், கைத்தலம் கூப்புமால்; இந்து காந்தத்தின் ஈர நெடுங் கலும் வெந்த காந்த, வெதுப்புறு மேனியாள் - கம்பராமாயணம் 2811 திரிந்த தமிழ்சொல்கள் சவுட்டு = சுவட்டு(சுவடு ஏற்படச்செய்) –> சவுட்டு(அகர உகர இடமாற்றம்) • போல்மம்: மிஞிறு = ஞிமிறு; ஒலுங்கு = கொசுகு துறையல் = திறவுகோல் –> துறையல் தாக்கோல் = தாழ்கோல் –> தாக்கோல் சாணாங்கி = சாணகம் –> சாணாங்கி உச்சை = உச்சி பொழுது –> உச்சை பொழுது –> உச்சை வெள்ளனே = காலையிலே சால்ரா வண்ணம் = பருமன் (நிறம் எனும் பொருள் தவறானது வடமொழியான வர்ணத்திலிருந்து வந்தது) • இதற்கு பொருட்டு என்று பொருள் உண்டு • பொருட்டாக கொள்ளப்படும் அளவிற்கு பருமன் உடையது எனும்பொருளில் வண்ணம் எனும் கையாளப்படுகிறது • ஓரளவிற்கு பருமனோ மதிப்போ இருந்தாலொழிய மக்கள் எதையும் பொருட்டே கொள்ளார் .... இங்கே பதியப்பட்டது கசடற தமிழ் கற்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக