இடுகைகள்

நவம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏழிலை

கப்பக்கிழங்கு என்று வழக்குமொழியில் வழங்கப்படும் ஏழிலைக் கிழங்கு பல சத்துகள் அடங்கிய கிழங்கு வகையாகும். அவித்துப் பொறித்து குழந்தைகளுக்கு வழங்கினால் அடம்பிடிக்காமல் சாப்பிடும் உணவு வகைகளில் இந்த கிழங்கும் ஒன்று. இந்த வாரம் ஏழிலைக் கிழங்கில் உள்ள சத்துகளை அறிவோம்... ஏழிலைக் கிழங்கின் அறிவியல் பெயர் மனிகாட் எஸ்கலன்டா என்பதாகும். உருமாறிய வேரே ஏழிலைக் கிழங்காகும். தென் ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட ஏழிலைக் கிழங்கு தற்போது ஆசியா , ஆப்பிரிக்கா , தென்அமெரிக்கா கண்டங்களில் பரவலாக உண்ணப்படும் உணவுப் பொருளில் ஒன்றாக உள்ளது. மனிகாட் , டாபியோகா , யுகா , கஸ்ஸவா என பல பெயர்களில் இது வழங்கப்படுகிறது. கிழங்கு வகைகளில் மாவுச்சத்து நிறைந்தது ஏழிலைக் கிழங்குதான். 100 கிராம் கிழங்கில் 160 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. இதில் சுக்ரோஸ் எனும் சர்க்கரை சத்து மிகுதியாக உள்ளது. மேலும் அமைலேஸ் என்ற கூட்டுச்சர்க்கரையும் கணிசமான அளவில் உள்ளது. மிகக்குறைந்த கொழுப்புச் சத்து கொண்டது. மற்ற கிழங்குகளைவிட அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. ஏழிலைக்கிழங்கில் குளுட்டன் இல்லாத புரதச்சத்து கிடைப்பது குற...

தமிழ்நிலை

தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான , தொன்மை வாய்ந்த மொழியாகும் . இத்தமிழ் மொழிக்கு வரி வடிவம் அதாவது எழுத்து உருவம் என்று உருவானது ? என்ற வினாவிற்குச் சரியான விடை கிடைக்கவில்லை . தற்சமயம் நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்களைக் கொண்டு சில மொழி வழி உண்மையை உணர்கிறோம் . இன்று நாம் பேசும் தமிழ்மொழி பல கால கட்டங்களில் பல மொழிகளோடு இணைந்து பல உருக்கள் மாறி இறுதி நிலையில் காண்கிறோம் . ஆனால் தொல் கால இந்திய எழுத்து முறையை ஆராய்ச்சியாளர்கள் தமிழெழுத்து முறை மற்ற இந்திய எழுத்து முறைகளைக்குத் தாய் பெருங்குரல் கொடுக்கிறார்கள் அறிஞர்கள் பூலரும் , ஐராவதம் மகாதேவன் அவர்களும் . தமிழ் வட்டெழுத்து தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் மிகமிகத் தொன்மை வாய்ந்தது வட்டெழுத்து முறையே ! வளைந்த கோடுகள் அவ்வெழுத்து முறையில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதால் அம்முறைக்கு வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது . இதன் அடிப்படையில் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் கோலெழுத்துக்கள் அல்லது “ மலையாண்மா ” என்ற எழுத்து முறை உருவானது . இக்கோலெழுத்துக...