வெள்ளி, 27 ஜனவரி, 2012

சித்தர்கள் - கணக்கு

சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம். முதல் சித்தர் பதினெட்டு சித்தர்கள் என்கிற கணக்கு ஏனோ, எப்போதுமே சொல்லப் பட்டு வந்திருக்கிறது. நமக்குக் கிடைத்திருக்கும் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டோடு நின்றுவிடவில்லை. அகத்தியர் முதலாய் வள்ளலார் வரையில் அநேக சித்தர்கள் பல்வேறுபட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றனர். நாம் அறிந்தும், அறியாமலும் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாருக்கும் முதல்வராய், ஆதி சித்தர் யாரென தேடினால்......, "நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம் நிர்மலமாம் சதாசிவனார் என்னக்குச் சொன்னார்" - அகத்தியர் - "சிவனார் உரைத்த மொழி பரிவாய் சொன்னார்" - தேரையர் - "தாரணிந்த ஈசன்று ஆயிக்குச் சொல்ல தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல" - போகர் - "சொல்லவே தேவிக்கு சதாசிவன்தான் சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல" - தன்வந்திரி - "பாதிமதி அணிந்தவர் தான் சொன்னதிது பதியான விதியாளி அறிவாள் பாரே" - யூகிமுனி - இது மாதிரி இன்னும் எத்தனையோ சித்தர்களின் பாடல்களை எடுத்தக் காட்டாய்ச் சொல்லலாம். இவர்கள் அனைவரும் சிவன் எனும் சிவபெருமான் சொன்னதாகவே சொல்லுகின்றனர். ஆக, சிவனே முதல் சித்தர் என்று அறுதியிட்டுக் கூறலாம். சித்தர்கள் வாழ்ந்ததாக கருதப் படும் இடங்களிலெல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை காணப்படுவது மூல குருவுக்கு வணக்கமாக இருக்கலாம். வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்தப் பதினெட்டுச் சித்தர்கள் யார், யார்? என்பதில் பலரது கூற்றுக்களில், சில பெயர்கள் மாறுபடுகின்றன. எனினும், முற்காலத்தில் உயரிய இறைநிலையை எய்தியவர்களின் எண்ணிக்கை பதினெட்டிற்கும் மேற்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி, உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காக செயல்கள் புரிந்தும், சேவை புரிந்துள்ளனர். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம்.நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள். முதல் தகுதி: சித்தத்தை அடக்கவல்லவர்கள். இரண்டாம் தகுதி: எண்வகை சித்துக்களை செய்ய வல்லவர்கள். மூன்றாம் தகுதி: முற்றும் துறந்தவர்கள் பாச இருளகற்றவர்கள் யான் என்ற அழுக்கற்றவர்கள். நான்காம் தகுதி: பிறப்பிற்குத் காரணமான வினைவித்தைக் கெடுத்து தூய உணர்வில் மாறி ஐம்புலன்களை அடக்கி சித்தத்தை ஒருமுகப்படுத்தி ஆன்மீக ஆற்றலைப் பெற்று புற உணர்வில் செத்துக்கிடப்பவர்கள். ஐந்தாம் தகுதி: உயிரினங்களின் இன்னல்களை நீக்க இடையராது சிந்தித்து முழு முயற்சியுடன் தெரிந்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும் உணர்ந்து இயற்கையோடு இணைந்த எளிய வாழ்வே உடல் நலனுக்கும் உள்ள நலனுக்கும் சாலச் சிறந்தது எனக் கண்டறிந்து மக்களினத்திற்கு ஏற்ற மருத்துவ முறையைக் கொண்டு வந்தவர்கள்.முக்காலமும் உணர்ந்த முழுமுதல் ஞானிகள். எக்காலமும் எத்தி போற்றப்பட வேண்டிய தமிழ் குலத் தலைவர்கள். இப்பதினெட்டு சித்தர்களுக்கு முன் இரேதாயுகத்தில் இரண்டு லட்சம் திரேதாயுலகத்தில் ஒரு லட்சம் துவாபரயுகத்தில் ஐம்பதாயிரம் கலியுகத்தில் இருபத்தைந்தாயிரம் ஆகமொத்தம் 375000 சித்தர்கள் தோன்றினர் என்று தேரையர் கூறுகின்றார். சித்தர்கள் வரலாறு இம்மண்ணுலகில் பிறந்த உயிரினங்களில் தலைமையான உயிரினமே மனித இனம். இந்த மணீசர்களோடு பதினெண் சித்தர்கள் உறவு கொண்டு உருவாக்கிய விந்து வழி வாரிசுகள் நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞானசித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள், ஓக சித்தர்கள், யாக சித்தர்கள், யக்ஞ சித்தர்கள்.... என்று 48 வகைப் படுகிறார்கள். இவர்களல்லாமல் பல வகைப்பட்ட குருவழிச் சித்தர்களும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். குருபாரம்பரியத்தில் குறிக்கப் படும் 48 வகைச் சித்தர்கள்: 1. பதினெட்டாம்படிக் கருப்புகள் 2. நவகோடி சித்தர்கள் 3. நவநாத சித்தர்கள் 4. நாத சித்தர்கள் 5. நாதாந்த சித்தர்கள் 6. வேத சித்தர்கள் 7. வேதாந்த சித்தர்கள் 8. சித்த சித்தர்கள் 9. சித்தாந்த சித்தர்கள் 10. தவ சித்தர்கள் 11. வேள்விச் சித்தர்கள் 12. ஞான சித்தர்கள் 13. மறைச் சித்தர்கள் 14. முறைச் சித்தர்கள் 15. நெறிச் சித்தர்கள் 16. மந்திறச் சித்தர்கள் 17. எந்திறச் சித்தர்கள் 18. மந்தரச் சித்தர்கள் 19. மாந்தரச் சித்தர்கள் 20. மாந்தரீகச் சித்தர்கள் 21. தந்தரச் சித்தர்கள் 22. தாந்தரச் சித்தர்கள் 23. தாந்தரீகச் சித்தர்கள் 24. நான்மறைச் சித்தர்கள் 25. நான்முறைச் சித்தர்கள் 26. நானெறிச் சித்தர்கள் 27. நான்வேதச் சித்தர்கள் 28. பத்த சித்தர்கள் 29. பத்தாந்த சித்தர்கள் 30. போத்த சித்தர்கள் 31. போத்தாந்த சித்தர்கள் 32. புத்த சித்தர்கள் 33. புத்தாந்த சித்தர்கள் 34. முத்த சித்தர்கள் 35. முத்தாந்த சித்தர்கள் 36. சீவன்முத்த சித்தர்கள் 37. சீவன்முத்தாந்த சித்தர்கள் 38. அருவ சித்தர்கள் 39. அருவுருவ சித்தர்கள் 40. உருவ சித்தர்கள் பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப் பட்டுள்ள சித்தர்கள் ஏழு வகைப்படுவர். “எண்ணற்கரிய சித்தர் எழுவர் (ஏழு பேர்)" “எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்” “ஏதமில் நிறை சித்தர் எழுவர்” “விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்” -- என்று பல குறிப்புகள் உள்ளன. சித்தர் பழமொழிகள். சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர்கள் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை தொகுத்தளித்திருக்கிறார். 1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும். 2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும். 3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும். 4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும். 5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும். 6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம் 1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும் உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள். 2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும். உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும். 3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும். சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள். 4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும் மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு. 5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும் ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி. 6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம் விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா? ________________________________________ 108 சித்தர்கள் 108 சித்தர்கள் 1. திருமூலர் - சிதம்பரம். 2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி. 3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில். 4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர். 5. கொங்கணர் - திருப்பதி, திருமலை 6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால் 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை. 8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம். 9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில். 10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு) 11. கோரக்கர் – பேரூர். 12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம். 13. சிவவாக்கியர் - கும்பகோணம். 14. உரோமரிசி - திருக்கயிலை 15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர். 16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை 17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை 18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம். 19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில். 20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம். 21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம். 22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர். 23. இராமதேவ சித்தர் - அழகர் மலை 24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர். 25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர். 26. காசிபர் - ருத்ரகிரி 27. வரதர் - தென்மலை 28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர். 29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில் 30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி. 31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம். 32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி. 33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர். 34. கமல முனி - ஆரூர் 35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம். 36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர். 37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள். 38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு. 39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி. 40. பட்டினத்தார் - திருவொற்றியூர். 41. வள்ளலார் - வடலூர். 42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி. 43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர். 44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம் 45. ராகவேந்திரர் - மந்திராலயம். 46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம். 47. குமரகுருபரர் - காசி. 48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு. 49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள். 50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி. 51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம். 52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம். 53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா. 54. யுக்தேஸ்வரர் - பூரி. 55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை 56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன. 57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி. 58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி. 59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி. 60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம். 61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம். 62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல். 63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி. 64. இராமதேவர் - நாகப்பட்டிணம். 65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை. 66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில். 67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது. 68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி. 69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது. 70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு. 71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி. 72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி. 73. கம்பர் - நாட்டரசன் கோட்டை. 74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம். 75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம். 76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது. 77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம். 78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை. 79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது. 80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே. 81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம். 82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது. 83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில். 84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு. 85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது. 86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில். 87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல். 88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை. 89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது. 90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி. 91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில். 92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை. 93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை. 94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர். 95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர். 96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில். 97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர். 98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி. 99. வன்மீக நாதர் - எட்டிக்குடி. 100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார். 101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. 102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை. 103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை. 104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர். 105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம். 106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை) 107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி. 108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம். பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி : ஆதி காலத்திலே தில்லை திருமூலர் அழகுமலை இராமதேவர் அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர் கமலமுனி ஆரூர் சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார் சுந்தரானந்தர் கூடல் சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற் றாள் காசி நந்திதேவர் ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி பழனி மலை போகநாதர் திருப்பரங்குன்றமதில் மச்சமுனி பதஞ்சலி இராமேசுவரம் சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர் கோரக்கர் மாயூரங்குதம்பர் திருவருணையோர் இடைக்காட சமாதியிற் சேர்ந்தனர் எமைக் காக்கவே. இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று. மதுரை அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ திருமூலர் - சிதம்பரம் இராமதேவர் - அழகர்மலை அகஸ்தியர் - திருவனந்தபுரம் கொங்கணர் - திருப்பதி கமலமுனி - திருவாரூர் சட்டமுனி - திருவரங்கம் கரூவூரார் - கரூர் சுந்தரனார் - மதுரை வான்மீகர் - எட்டிக்குடி நந்திதேவர் - காசி பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில் போகர் - பழனி மச்சமுனி - திருப்பரங்குன்றம் பதஞ்சலி - இராமேஸ்வரம் தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில் கோரக்கர் - பொய்யூர் குதம்பை சித்தர் - மாயவரம் இடைக்காடர் - திருவண்ணாமலை சக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக. நலம் பெறுக. கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான பஞ்சமுக சுரேஸ்வர சித்தர், 1. சதுர்முக சுரேஸ்வர சித்தர், 2. திரிபலாதர சுரேஸ்வர சித்தர், 3. ஸ்கந்த பதுமபலாதி சித்தர், 4. திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக