வெள்ளி, 15 மே, 2015

அலுவலர் பெயர்

 அலுவலர் பெயர்
அஞ்சகார-காடியின் அஞ்சல் அலுவலர்
அட்டவனே-காடியின் வருவாய்க் கணக்கர்
அமில்தார்-தற்போதைய வட்டாட்சியருக்கு இணையான பதவியை வகித்தவர்
அரிகார்-செய்தி கொண்டு சேர்ப்பவர்(பிராமண வகுப்பினர்)
இராகுத்தராயன்-குதிரை வீரர்களின் தலைவன்
எக்கொட-கிராமத்தலைவன்
ஒபாலிதார்-ஒபாலியின் ஆட்சித்தலைவர்
கண்டசார்-சுதேசி
கரித்தாக்கன்-மதுரைநாயக்க மன்னர்களைக் குறித்த பட்டப் பெயர்
கிலாதார்-கோட்டை அதிகாரி
சில்லாதார்-சொந்தமாக போர்க்குதிரையும்,ஆயுதமும் வைத்திருக்கும் வீரன்
சுபேதார்-ஆட்சித் தலைவர்
தேஸ்குல்கர்னி-மாவட்டக்கணக்கர்
நீர்க்கண்டி-பாசனநீர் வீணாக்காமல் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட அலுவலர்
பண்டாரம்,பண்டாரி-கருவூல அலுவலர்
படேல்-தலைவன்
பட்டணசெட்டி-நகர வணிகக் குழுவின் தலைவன்
பட்டின சுவாமி-நகரத் தந்தை,மேயர்
பவுஸ்தார்-மாவட்டங்களை ஒத்த பகுதியை -நிர்வகித்த ஆட்சித் தலைவரைக் குறித்தது
பாரா,பலூடி-கிராமத்தலைவன்,கணக்கன்,சோதிடன்,கண்காணி,காவலன்,நீர்க்கண்டி,வண்ணான்,நாவிதன்,குயவன்,கொல்லன்“,தச்சன்,தட்டான்ஆகியோர் செய்யும் தொழில்களைக் குறித்தன.
இவர்கள் அறுவடைக் காலங்களில் கிராம மக்களிடம் இருந்து ஒரு பகுதியைத் தானமாகப் பெற்றன.
போயி,போவா-பல்லக்குதூக்கி
மஞ்சநீர்ப்பிள்ளை-தத்துப்பிள்ளை
முட்டாதர்-நிலக்கிழார்
ரிசால்தார்-குதிரைப் படையில் நியமிக்கப்பட்ட சுதேசி அதிகாரி
லஸ்கர்-காலாட்படையின் கடைநிலைப் பணியாள்,துப்பாக்கி சுமந்து வருதல்,கூடாரம் அடித்தல் போன்ற பணிகளுக்கு நியமிக்கப்பட்டவர்
நன்றி
க.இலக்குமி நாராயணன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக