இடுகைகள்

நவம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

(மகாபாரதப் போர் - தமிழர்கள்)

படம்
ஐந்திணைகளும் ஐம்பூதங்களும்: தொல்தமிழகத்தில் முல்லை , குறிஞ்சி , மருதம் , நெய்தல் , பாலை என்ற ஐவகை நிலங்கள் இருந்ததாக முன்னர் கண்டோம். இயற்கையின் ஒப்பற்ற அமைப்புக்களாக விளங்கிய இந்த ஐந்துவகை திணைகளும் தொல்தமிழகத்திற்குக் கிடைத்த அரிய வரங்கள் என்றே கூறலாம். வடக்கே பனிமலையும் , கிழக்கே கடலும் , மேற்கே பாலைவனமும் இயற்கை அன்னை கொடுத்த பாதுகாப்பு அரண்களாக இருந்து தொல்தமிழகத்தைக் காத்துக் கொண்டிருந்தன என்றால் மிகையாகாது. அதுமட்டுமின்றி , இந்த ஐவகைத் திணைகளில் ஒவ்வொரு திணையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையதாக விளங்கியது. அதாவது இந்த ஐவகைத் திணைகளும் இயற்கையின் ஐம்பேராற்றல்களான ஐந்து பூதங்களுடன் தொடர்புடையனவாய் இருந்தன. ஒவ்வொரு திணையும் ஒரு பூதத்துடன் தொடர்புடையதாய் அதன் அளப்பரிய ஆற்றலை தன்னில் கொண்டதாய் விளங்கியது. இனி இந்த ஐந்து திணைகளுக்கும் ஐந்து பூதங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று காணலாம். முல்லைத் திணையில் இயற்கையின் முதல் பூதமான ஆகாயம் சிறப்புற விளங்கியது எனலாம். கார்காலத்தை தனது பெரும்பொழுதாகவும் மேகத்தையே (மாயோன்) தனது தெய்வமாகவும் கொண்டது முல்லைத் திணை ஆகும்....

ஆதிபகவன் யார்

படம்
ஆதிபகவன் யார் ? http://thiruththam.blogspot.com/search/ குறள்: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.                                              - குறள் எண்: 1 தற்போதைய பொருள்: பரிமேலழகர் உரை : எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன. அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. மு.வ உரை : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை , ஆதிபகவன் , உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. சாலமன் பாப்பையா உரை : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன ; ( அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. குழப்பங்கள்: மேற்காணும் உரைகளில் கலைஞர் உரை நீங்கலான மூன்று உரைகளும் ஆதிபகவன் என்பதற்கு பொதுவாக ' கடவுள் ' என்று விளக்கம் கொடுத்துள்ளன. ஆனால் இன்...