இடுகைகள்

நவம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் எழுத்துக்கள்

தமிழ் எழுத்துக்கள் முப்பதா ? ஐம்பத்தொன்றா ? http://swamiindology.blogspot.in/2013/01/blog-post_24.html 51  எழுத்துக்கள் 51 தேவதைகள் 51 புலவர்கள் சம்ஸ்கிருதத்தில் அ முதல் க்ஷ வரை 51 எழுத்துக்கள் உள்ளன. இதையே தமிழ்ப் புலவர்களும் ஏற்றுக்கொண்டு பாடல்களில் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். திருமூலர் , அருணகிரிநாதர் , பரஞ்சோதி முனிவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சங்கத் தமிழ் புலவர்கள் 49 பேரும் 49 எழுத்துக்களின் வடிவம் என்ற திருவிளையாடல் புராணக் கதையும் சுவையானது. 51 எழுத்துக்களை பீஜாக்ஷரங்கள் (வித்து எழுத்துக்கள்) என்பர் அவற்றால் ஏற்படும் மாலை மந்திர மாலை அல்லது மாத்ருகா புஷ்ப மாலை எனப்படும். 51 எழுத்துக்களுக்கும் தனித் தனி தேவதைகள் உண்டு. விராலிமலையில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில்: “ ஐந்து பூதமும் ஆறு சமயமும் மந்த்ர வேத புராண கலைகளும் ஐம்பத்தோர்விதமான லிபிகளும்     வெகுரூப ” என்றும் இன்னுமோர் இடத்தில் “ அகர முதலென உரை செய்   ஐம்பதொரக்ஷரமும் அகில கலைகளும் வெகுவிதங் கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும் அடங்கும் தனிப் பொருளை ” எ...

இணையத்தில் கொரியமொழி,தமிழ்மொழி-கற்றல் நிலை-ஓர் ஆய்வு

படம்
இணையத்தில் கொரியமொழி, தமிழ்மொழி-கற்றல் நிலை-ஓர் ஆய்வு CHENNAI-CONFERNCE-2015-NOVEMBER-SIX                                                  நாம் பேசும் மொழியானது , உள்ளிருக்கும் காற்றினை வெளியில் விடும் பொழுது மிடறு , நாக்கு , பற்கள் , வாயினது மேற்பகுதியாகிய அண்ணம் , உதடுகள் ஆகிய உறுப்புகளின் உதவியால் உருவாகிறது. இம்மொழியின் உதவியால் உலகத்தில் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்துவரும் மக்களின் இனம் , பண்பாடு , பழமை இவற்றைத் தெளிவுற அறிந்துகொள்ள ஏதுவாகிறது. அவ்வடிப்படையின்கீழ் இணையத்தில் தமிழ் , கொரியா மொழிகளின் கற்றல் நிலைப்பாடுகள் குறித்தும் , அம்மொழிகளின் சிறப்புகள் குறித்தும் இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது. கொரிய எழுத்துக்கள் உலகில் ஆறாயிரத்து எண்ணூற்றுக்கும் ( 6800) மேற்பட்ட மொழிகள் ஏறக்குறைய இருநூறு நாடுகளில் பேசப்படுவதாகவும் , இதில் இரண்டாயிரத்து முன்னூறு ( 2300) மொழிகள் மட்டுமே எழுத்துருவங்களை கொண்டுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதில் இரண்டாயிரத்து...