இடுகைகள்

பிப்ரவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சவுகந்திகா மலர்-story

ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார். அது சவுகந்தி என்ற மலரின் மணம். அவ்வகை மலர் குபேரனின் அழகாபுரி நந்தவனத்தில் மட்டுமே இருப்பது அவருக்குத் தெரியும். அந்த சூழ்நிலையில் அவருக்கு தன் வாகனமான கருடனின் மீதும், தன் ஆயுதமான சக்கரத்தின் மீதும் கவனம் சென்றது. அவைகள் இரண்டும் நீண்டகாலமாகவே ஆணவம் கொண்டு ஆர்பாட்டம் செய்து வந்தன. பரமாத்வையே ஏற்றிச்செல்வதால் தானே உயர்ந்தவன் என்று கருடன் நினைத்தது. அதைப்போலவே சக்ராயுதமும் தான் இல்லையென்றால் பரமாத்மாவே செயல்பட முடியாது. என்னால்தான் பலரும் பரமாத்மாவைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்ற கர்வத்துடன் இருந்தது. கிருஷ்ணனுக்கு இவர்களின் தம்பட்டமும் கர்வமும் தெரிந்தே இருந்தது. தக்க சமயத்தில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டி பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தார். இப்போது அவருக்கு அந்த சமயம் கிட்டிவிட்டது. இதைத்தான் நேரம் வருவது என்பார்கள். இப்போவெல்லாம் ஆட்டம் போடத்தாண்டா செய்வே. உனக்கும் ஒரு நேரம் வரும் பாரு, என சாதாரண மனிதர்களான நாம் பேசிக் கொள்வது போல, தெய்வத்தை சுமக்கும் கருடனுக்கும், தெய்வமே சுமக்கும் சக்கரத்தா...

கந்தமான பர்வதம்(திருச்செந்தூர்)-இராமாயணம்-மகாபாரதம் இணைந்த கதை

நன்றி-தினமலர் ஒரு சமயம் பகவான் கிருஷ்ணர் கருடனை அழைத்து பக்ஷிராஜா! குபேரனின் ஏரியில் மலர்ந்திருக்கும் அழகும் வாசனையும் கொண்ட சவுகந்தி மலர்களைப் பறித்து வா என்று கூறி அனுப்பினார். என் போன்ற பலமும், வேகமாகச் செல்லக்கூடிய திறனும் பெற்றவன் இம்மூவுலகிலும் இல்லை முடியாது என சொல்லியபடி வேகமாக பறந்தது கருடன். கந்தமாதன பர்வதத்தை அடைந்து, ஏரியில் இறங்கி சவுகந்தி மலரைப் பறித்தது. அந்த ஏரிக்கரையில் தான் அனுமான் ராமஜெபம் செய்து கொண்டிருந்தார். கருடன் மலர்களைப் பறிப்பதைப் பார்த்த அனுமன், ஏ பறவையே! இம்மலர் யக்ஷராஜன் குபேரனுக்கு உரியது. அவன் அனுமதியின்றி இம்மலர்களைப் பறிக்கக்கூடாது. இருந்தாலும் கேட்கிறேன். இம்மலர்களை அப்படி யாருக்காகப் பறிக்கிறாய்? சொல், என்றார்.கருடன், பகவான் கண்ணபரமாத்மாவிற்காகப் பறிக்கிறேன். பகவான் பணிக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை, என்று மிகக் கர்வமாகப் பேசியது. இதைக்கேட்ட அனுமனுக்கு மிகுந்த கோபம் ஏற்பட, கருடனைப் பிடித்துக் கொண்டு துவாரகை சென்றார். அனுமனின் ஆரவாரம் கண்டு துவாரகை மக்கள் நடுங்கினர். அப்போது அனுமனைத் தடுக்க சுதர்சனச் சக்கரம் விரைந்து வந்தது. அதையும் அனுமன் பிடித்...

திருச்செந்தூர்

திருச்செந்தூர் -thanks dinamalar திருச்செந்தூர் என்றதும், நம் கண்களில் முதலில் தெரிவது அங்கிருக்கும் அழகிய கடல். இந்தக் கடலில் நீராடி மகிழ்வதில், பக்தர்களுக்கு அலாதி ஆனந்தம். சுனாமி வந்த போதும் கூட, சுப்பிரமணியர் அருளால், கடல் உள் வாங்கியதே தவிர, மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சூரபத்மனுடன், முருகப்பெருமான் போரிட்ட போது, அவன் கடலுக்குள் சென்று மறைந்தான். உடனே, முருகன், தன் வேலாயுதத்தை கடலை நோக்கி வீசினார். வேலுக்கு பயந்த கடல், அப்படியே உள் வாங்கியது என்று கந்தபுராணத்தில் வாசிக்கிறோம். அதே நிலை, இந்த கலியுகத்திலும் ஏற்பட்டது என்பதை நினைத்தால் புல்லரிக்கிறது. சுனாமியை வென்ற சுப்பிரமணியராகத் திகழ்கிறார் செந்திலாண்டவன். இந்தக் கடலை, "வதனாரம்ப தீர்த்தம்' என்பர். பக்தர்களின் கொடிய பாவங்களையும் தீர்த்து வைக்கும் அற்புதக் கடல் இது. கனகசுந்தரி என்ற தேவலோகப் பெண், பெருமாளின் அம்சமான ஹயக்ரீவரின் குதிரை முகத்தைப் பார்த்து கேலி செய்தாள். ஒருவர் அழகில்லை என்றால், அவர்களைக் கேலி செய்வது மாபெரும் பாவம். அந்தத் தவறுக்கு தண்டனையாக, அவளது முகம் குதிரை முகமாக மாறும்படியும், பூலோகத...

கலைகள்-64

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);2. எழுத்தாற்றல் (லிகிதம்); 3. கணிதம்;4. மறைநூல் (வேதம்); 5. தொன்மம் (புராணம்);6. இலக்கணம் (வியாகரணம்); 7. நயனூல் (நீதி சாத்திரம்);8. கணியம் (சோதிட சாத்திரம்); 9. அறநூல் (தரும சாத்திரம்);10. ஓகநூல் (யோக சாத்திரம்); 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்); 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்); 15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);16. மறவனப்பு (இதிகாசம்); 17. வனப்பு; 18. அணிநூல் (அலங்காரம்); 19. மதுரமொழிவு (மதுரபாடணம்);20. நாடகம்; 21. நடம்; 22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்); 23. யாழ் (வீணை);24. குழல்; 25. மதங்கம் (மிருதங்கம்);26. தாளம்; 27. விற்பயிற்சி (அத்திரவித்தை); 28. பொன் நோட்டம் (கனக பரீட்சை); 29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை); 30. யானையேற்றம் (கச பரீட்சை); 31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை); 32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை); 33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை); 34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்); 35. மல்லம் (மல்ல யுத்தம்);36. கவர்ச்சி (ஆகருடணம்); 37. ஓட்டுகை (உச்சாடணம்);38...

சித்தர்

சித்தர்களின் சித்துவிளையாட்டுகள் –சித்தர்கள் என்றால் அறிவு நிறைந்தவர்கள் என்று பொருள். சித்திகள் என்ற மனித அறிவுக்கு எட்டாத பல காரியங்களில் ஈடுபடுபவர்கள். இந்த சித்திகளில் எட்டு பெரும் சித்திகள் உள்ளன. இதை அட்டமா சித்திகள் என கூறுகின்றார்கள். அவைகளை அறிந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் சித்தர்கள். அட்டாங்க யோகங்கள் இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, வெஃகாமை (பிறர் பொருள் விரும்பாமை) புலன் அடக்கம் என்பனவாம். நியமம் - தவம், மனத்தூய்மை, தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல். ஆதனம் - பத்திரம், கோமுகம், பங்கயம் , கேசரி, சுவத்திகம் (மங்கலம்), சுகாதானம் (சுகமும்,திடமும் எவ்வாறிருக்கின் எய்துமோ அவ்வாறிருத்தல்), வீரம், மயூரம் முதலிய இருப்பினுள் ஒன்றாயிருத்தல். பிராணாயாமம் - பிராண வாயுவைத் தடுத்தல், வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல், இரேசக,பூரக கும்பங்களால் தடுத்தல் (இரேசகம் என்பது மூச்சை வெளிவிடுதல், பூரகம் என்பது வாயுவை உட்செலுத்துதல்). இதுவும் இரண்டு வகைப்படும்.1- அகற்பம் - மந்திரமில்லாது நிறுத்தல். 2- சகற்பம் - பிரணவத்துடன் காயத்திரி மந்திரத்தை, உச்சரித்து ந...

அளவு

15 துளிகள் = 1 மிலி 1 சிட்டிகை = 1 மிலி 1/4 டீஸ்பூன் = 1.25 மிலி 1/2 டீஸ்பூன் = 2.5 மிலி 1 டீஸ்பூன் = 5 மிலி 1 டேபிள்ஸ்பூன் = 3 டீஸ்பூன்(15 மிலி) 1/2 கப் = 125 மிலி 1 கப் = 250 மிலி 1/2 கப் = 125 மிலி 1/3 கப் = 80 மிலி 1/4 கப் = 60 மிலி 1/8 கப் = 30 மிலி

சங்கம்

thanks-wikiepaedia சங்கம் என்ற சொல் "கழகம்", "கூடல்" என்று பொருள்தரும் வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். பௌத்தம் இந்தியாவில் உயர்நிலையிலிருந்த காலத்தில் பௌத்த குருமாருடைய கூடல் "சங்கம்" எனப்பட்டது. தற்போதும் இச்சொல் பௌத்தசமயத்துடன் பெரிதும் தொடர்புள்ளது. இதைவிடக் குறிப்பிட்ட நோக்கத்துடன் பலர் கூடி அமைக்கும் ஒரு குழுவும் "சங்கம்" என அழைக்கப்படுகின்றது. இதன்படி, தமிழ் அல்லது தமிழர் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படும் சங்கங்கள் தமிழ்ச்சங்கங்கள் எனப் பெயரிடப்படுகின்றன. இவ்வாறான தமிழ்ச்சங்கங்கள் பல தமிழகத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ளன. எனினும், தமிழ் தொடர்பில் சங்கம் என்ற சொல் பண்டைத் தமிழகத்தில் இருந்ததாகச் சொல்லப்படும், தமிழ்ச் சங்கங்களையே விசேடமாகக் குறிக்கும். தொல்பழங்காலத்தில், அக்காலத்துப் பாண்டிய அரசர்களின் ஆதரவில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று தமிழாய்ந்த சங்கங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என இன்று குறிப்பிடப்படும் இச்சங்கங்களில் முதற்சங்கம், கடல்கோளினால் அழிந்துபோன பழைய மதுரையில் இருந்ததாம்...

அழித்த பைல்களை மீட்டுக் கொள்ள-வழி

ஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா? கவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியம்?இதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் விரிவாக பார்ப்போம். 1.டிஸ்க் டிக்கர் (Disk Digger)கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.மீண்டும் பார்மட் செய்யப் பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம். விண்டோஸ் இயக்கத்தில் இயங்குகிறது. இதனை உருவாக்கியவர் டிமிட்ரி ப்ரையண்ட் என்பவர். இது ஓர் அளவில் சிறிய எக்ஸிகியூட்டபிள் புரோகிராம்.ஒரு ஸிப் பைலுக்குள்ளாகக் கிடைக்கிறது.. இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இதன் எக்ஸிகியூட்டபிள் பைலை இயக்கி எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவ...

word-short key

Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க. Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க. Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy). Ctrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க. Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க. Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y. Ctrl+g: ஓரிடம் செல்ல. Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட(Replace). Ctrl+i:எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க . Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify) அமைக்க. Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த. Ctrl+l: பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க. Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட. Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க. Ctrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க. Ctrl+p: டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்க Ctrl+q: பத்தி அமைப்பை நீக்க. Ctrl+r: பத்தியினை வலது புறம் சீராக, நேராக அமைக்க. Ctrl+s: தானாக, டாகுமெண்ட் பதியப்பட (Auto save). Ctrl+t: பத்தியில் இடைப்பட்ட இடத்தில் இடைவெளி (Hanging) அமைக்க. Ctrl+u: டெக்ஸ்ட்டி...

சைவம் போற்றும் நால்வர் காலம்

சைவம் போற்றும் நால்வர் காலம் - ஆராய்ச்சிக் கட்டுரை - குடந்தை ந. சேதுராமன் தமிழ்ச் சைவ மரபில் நால்வர் மூர்த்திகள் (சிவன்கோவில்களில் கால வரிசையில் நால்வர். மாணிக்கவாசகர் கடைசி என்பதை நோக்கலாம்.) சித்திரம்: திருமயிலை வி. சுந்தர முதலியார், பெரிய புராணம், விக்டோரியா ஜுபிலி பிரஸ், 1893-ஆம் ஆண்டு. ---------------------- நால்வர் காலம் குடந்தை என். சேதுராமன் பி.எஸ்ஸி., டி.எம்.ஐ.டி., இயக்குநர், இராமன் மற்றும் இராமன் வணிகக் குழுமம். (Director, Raman & Raman Co., Kumbakonam) சைவ உலகில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும், மாணிக்கவாசகரும் நால்வர் எனப்படுவர். நால்வரின் காலங்களைப் பல அறிஞர்கள் பலகோணத்தில் ஆய்ந்து உள்ளனர். அவர்களின் ஆய்வுகளும் அணுகுமுறைகளும் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெருவிருந்தாய் அமைகின்றன. அடியேன் இவ் ஆய்வில் இறங்குவதற்குமுன் அப்பெரியோர்களுக்கு எனது வணக்கத்தை முதற்கண் கூறி, ஆராய்ச்சியைத் துவக்குகிறேன். பலபுதிய செய்திகளை ஆங்காங்கே காணலாம். நால்வரின் கால ஆராய்ச்சிக்கு மூலக் கருவூலங்களாகத் துணை நிற்பவை முறையே பாண்டியர் வரலாறு, பல்லவர் வரலாறு...

ப்ராணாயாமம்-யோகா முறை

ganesan ஒருவனுக்கு எதில் ஆழ்ந்த ஆர்வம் உண்டோ, எதில் அதிகத் தேடல் உண்டோ அதற்குத் தகுந்த மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் கண்டிப்பாகத் தன் வாழ்க்கையில் அவன் காண்கிறான். பால் ப்ரண்டன் அமானுஷ்ய சக்தி படைத்தவர்களையும், அவர்களில் உண்மையான ஒரு யோகியையும் கண்டுவிட வேண்டும் என்றும் கடல் கடந்து இந்தியாவுக்கு வந்தது வீண் போகவில்லை. பல அற்புத மனிதர்களைக் கண்டார். அவர்களில் ஒருவர் ப்ரம்மா என்ற இளைஞர். சென்னைக்கு அருகே அவரைச் சந்தித்தவுடன் ஏதோ ஒரு விசேஷ சக்தி அவரிடம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பால் ப்ரண்டன் அவரிடம் வலிய சென்று பேசினார். ஆரம்பத்தில் ப்ரம்மா அவர் வந்து பேசியதை அவ்வளவாக விரும்பவில்லை. ஹத யோகியான ப்ரம்மா அவரை ஒரு இடைஞ்சலாகவே நினைத்தார். ஆனால் பால் ப்ரண்டனுடைய உண்மையான ஆர்வத்தையும், அவர் இந்தியா வந்த காரணத்தையும் அறிந்த பின் ப்ரம்மா அவரிடம் யோகாவைப் பற்றிப் பேசினார். பால் ப்ரண்டன் அவருடைய யோக சக்திகளை நேரில் காண விரும்பினார். முதலில் ப்ரம்மா தயங்கினார். பால் ப்ரண்டன் புரியாமல் கேட்டார். "உங்கள் யோக சக்திகளை மறைவாகவும் ரகசியமாகவும் வைத்திருப்பது எதற்காக? நான்கு பேர் அறிவதில் ...

திருவிளையாடற் புராணம்-சங்கப்பலகை தந்தபடலம்

திருவிளையாடற் புராணம் ஐம்பத்தொன்றாவது - சங்கப்பலகை தந்தபடலம் உரையாசிரியர்: ந. மு. வேங்கடசாமி நாட்டார் [அறுசீரடி யாசிரிய விருத்தம்] வேடுரு வாகி மேரு வில்லிதன் னாமக் கோலெய் தாடம ராடித் தென்ன னடுபகை துரந்த வண்ணம் பாடினஞ் சங்கத் தார்க்குப் பலகைதந் தவரோ டொப்பக் கூடிமுத் தமிழின் செல்வம் விளக்கிய கொள்கை சொல்வாம். (இ - ள்.) மேருவில்லி - மேருமலையை வில்லாகவுடைய சோமசுந்தரக்கடவுள், வேடு உருவாகித் தன் நாமக்கோல் எய்து - வேட்டுவத்திருமேனி கொண்டு தனது திருப்பெயர் தீட்டிய கணைகளை விடுத்து, ஆடு அமர் ஆடி - வெற்றியையுடைய போர்புரிந்து, தென்னன் அடுபகை துரந்த வண்ணம் பாடினம் - பாண்டியனது கொல்லும் பகையாகி வந்த சோழனைத் துரத்திய திருவிளையாடலைக் கூறினாம்; சங்கத்தார்க்குப் பலகை தந்து - (இனி அவ்விறைவனே) சங்கப் புலவர்க்குப் பலகை அளித்தருளி, அவரோடு ஒப்பக்கூடி - அவரோடு வேற்றுமையின்றிக் கூடியிருந்து, முத்தமிழின் செல்வம் விளக்கிய கொள்கை சொல்வாம் - முத்தமிழாகிய செல்வத்தைப் பொலிவுபெறச் செய்த திருவிளையாடலைக் கூறுவாம். கோல் - அம்பு. அடு, பகைக்கு அடை. முத்தமிழ் - இயல், இசை, நாடகம் என்றும் மூவகைத் தமிழ். தமிழின், இன் : ச...