இடுகைகள்

அக்டோபர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வால்மீகி ராமாயணத்தில் தமிழ்ப் பழமொழி!

படம்
வால்மீகி ராமாயணத்தில் தமிழ்ப் பழமொழி! jayasree மதுர மொழி என்றழைக்கப்பட்ட தமிழ் மொழி , மனித   பாஷை என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தது அசோக வனத்தில் சிறைப்பட்டிருந்த சீதையிடம் ,   அனுமன் பேச முடிவு செய்த பொழுது ,   அவளுடன் மனித பாஷையில் பேசுவதுதான் சிறந்தது ,   அப்பொழுதுதான் அவள் தன்னைச் சந்தேகப்படமாட்டாள் என்று நினைத்து மனித பாஷையில் பேசினான் அந்தக் காலக்கட்டத்தில் , அதாவது ராமாயண காலத்தில்   சாதாரண மக்கள் மனித பாஷயில் பேசினார்கள் என்றால்   சீதையைச் சுற்றியிருந்த ராக்ஷசிகள்   எந்த பாஷையில் பேசியிருப்பார்கள் ?  அந்த ராக்ஷசிகள் சாமானிய மக்கள் என்ற குறியீட்டில் வருபவர்கள்தானே ?  குணத்தால் ராக்ஷசிகள் எனப்பட்டாலும் ,  அவர்கள் ராவணனைப் போல சமஸ்க்ருத பண்டிதர்களாக இருந்திருக்க முடியாது.   அவர்கள் சாமானியர்களாக இருந்திருக்கவேதான் ,  ஒரு வனத்தில் காவல் காக்கும் தொழிலுக்கு வந்திருக்கிறார்கள்.   இந்த நோக்கில் ஆராயும்போது ,  அந்த ராக்ஷசிகளும் தங்களுக்குள் மனித பாஷையில்தான் பேசியிருக்க வேண்டும்   என்பதே ஏற்றுக் கொள்ளத்தக்க...

பூம்புகாரின் தொன்மை

படம்
பூம்புகாரின் தொன்மை 11,500 ஆண்டுகள். மனித வாழ்க்கைக்குத் தொடர்புடைய சப்தரிஷி யுகம் அல்லது லௌகீக யுகம் கி-மு- 17,476  ஆண்டு ஆரம்பித்திருக்கக்கூடிய சாத்தியக் கூற்றினை உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொண்டுள்ள பனியுகம் முடிந்த காலத்துடன் ஒத்துப் போகிறது அதன் தொடர்பாக நம் தமிழ் மண்ணிலும் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதில் முக்கிய ஆதாரம் பூம்புகார்! இந்தத் தொடரில் இந்திரன் சம்பந்தப்பட்ட விவரங்களில்தான் நாம் இன்னும் இருக்கிறோம். இந்திரன் சம்பந்தப்பட்ட இடம் புகார் நகரமாகும். அங்கு நடந்து வந்த இந்திர விழா குறித்த தமிழ் ஆதாரங்களைப் பார்க்கும்போது , போனஸாக பல விவரங்களும் கிடைக்கின்றன. அப்படிக் கிடைத்ததுதான் , முசுகுந்தனும் , மனுவில் ஆரம்பித்த சோழ பரம்பரையும் , சோழர்கள் கொண்டாடிய சிபியின் உறவு முறையில் வரும் ராமனும். அவர்களைப் பற்றிய விவரங்களைப் பார்க்கும் போது , அவர்கள் வாழ்ந்த காலம் பற்றிய விவரங்கள் நமக்குக் கிடைத்தன. அதை ஆராய்ந்தபோது யுகங்களைப் பற்றியும் , ராமன் வாழ்ந்திருக்ககூடிய காலத்தைப் பற்றியும் அறியலாம். பனியுகம் ( Ice Age ) என்றால் என்ன என்பதைப் பற்ற...