இடுகைகள்

டிசம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் மொழியில் எழுத்து பிறக்கும் வகைகள்

தமிழ் மொழியில் எழுத்து பிறக்கும் வகைகள் 1. இதழ்களில் பிறக்கும் எழுத்துகள். ( Labials)              ப வ ம 2. பற்களைத் தொட்டுப் பிறக்கும் எழுத்துகள். ( Dentals)        ந   த 3. முன் அண்ணத்தைத் தொட்டுப் பிறக்கும் எழுத்துகள். ( Palatals)       ச ஞ ய 4. பின் அண்ணத்தைத் தொட்டுப் பிறக்கும் எழுத்துகள். ( Velar Sounds)     க    ங 5. உள் நாக்கில் பிறக்கும் எழுத்துகள். ( Uvular Sounds)           ர   ழ 6. நாக்கை வளைத்துப் பிறக்கும் எழுத்துகள். ( Cacuminals)        ட   ண   ள இலக்கணத்தைப் பற்றி சில வரிகள்   இலக்கிய மின்றேல் இலக்கண மின்றே   எள்ளின் றாகின் எண்ணெயு மின்றே   எள்ளினின்(று) எண்ணெய் எடுப்பது போல்   இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்.  ...

அற்புதம் விளைவிக்கும் அதிசய மூலிகைகள்

படம்
அற்புதம் விளைவிக்கும் அதிசய மூலிகைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு , அற்புதம் விளைவிக்கும் அதிசய மூலிகைகள் என்ற தலைப்பில் தாவர இயல் பேராசிரியர் திரு பாலு என்பவர் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தில் நிகழ்த்திய உரையிலிருந்து சில பகுதிகள். கீழ்க் கண்டவற்றில் *குறியிட்டவை அவர் செயல் முறை விளக்கத்துடன் காட்டியவை. * நார்த்தாமலையில் கிடைக்கும் ஒரு அரிய மரத்தின் இலை புறாத் தழை. இதில் ஒன்றை எடுத்துக் கசக்கிப் பிழிந்து அந்தச் சாற்றை பாலில் விட்டால் அது உடனே   தயிர் ஆகிவிடும். * கட்டுக் கொடி என்று ஒரு மூலிகை. இதில் 3 வகை உண்டு. ஒன்று விஷமுடையது. மற்ற இரண்டுக்கும் ஒரு குணம் உண்டு. இதைப் பிழிந்து வரும் சாற்றைத் தண்ணீரில் கலந்தால் தண்ணீர் அல்வா போல , கெட்டியாகவும் இனிப்புச் சுவையுள்ளதாகவும் மாறும். சதுரக் கள்ளி என்றொரு செடி. இதன் பாலை ஈர அரிசியுடன் கலந்து வைத்தால் அரிசி வெந்து சாதமாகிவிடும். ஆனால் இது உண்பதற்கு உரியது அல்ல. நீரைக் கொண்டு விளக்கு எரிக்க முடியுமா ? சித்தர்கள் செய்வதாகச் சொல்கிறார்கள். நாமும் சித்தராகலாம். சதுரக் கள்ளிப் பால் , அத்திப் பால் , ஆலம்பால் இவற்றில் ஒன்றை நீர...