வேறுபட்ட பரப்பும் , முக்கியத்துவமும் உடைய இடங்களோடு , தொடர்புபடுத்தி ஒரு பண்பாட்டு கட்டத்தை விவரிக்கும் பொழுது , இந்தியா முழுவதும் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் , அடுத்தடுத்து பல பண்பாடுகளையுடைய மக்கள் முன்பு வாழ்ந்து வந்துள்ளனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். சங்ககாலமும் இதற்கு விதிவிலக்கல்ல. சங்ககாலத்தில் ஐவகை நிலங்களையும் ஐவகைப் பண்பாடுகளையும் காண்கிறோம். திணை என்பது நிலத்தையும் ஒழுக்கத்தையும் குறிப்பதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. அகத்திணை ஒழுக்கங்களாக புணருதல் ( குறிஞ்சி) , இருத்தல் (முல்லை) , ஊடல் (மருதம்) , இரங்கல் (நெய்தல்) , பிரிதல் ( பாலை) எனச் சங்கப் புலவர் மரபு வரையறை செய்துள்ளது. ஒழுக்கம் அல்லது நடத்தை அவர்களின் பொருளில் வாழ்வின் பிம்பங்களாக பிரதிபலிக்கிறது. தகாப்புணர்ச்சி அல்லது அகமணம் என்ற நிலையிலும் , வேட்டையை மட்டும் பொருளியல் அடிப்படையாகக் கொண்டதுமான தாய்வழிச் சமூகத்தை சங்க இலக்கியம் பதிவு செய்யவில்லை. மாறாக தகுபுணர்ச்சியும்(புறமணம்) வேட்டையுடன் உணவு சேகரிக்கக் கற்றுக் கொண்டதுமான இனக்குழு (தாய்வழிச் சமூகம்) சமூகத்தையே காண முடிகிறது. அக மணமுறைய...