இடுகைகள்

காலகணக்கு

1 ."கல்பம்" என்ற ஆண்டுக் கணக்கை பயன்படுத்திய இந்திய தத்துவ அறிஞர்களுக்கு, "ஒளி ஆண்டு" கணக்கு எப்படி வியப்பூட்டும் விஷயம் அல்லவோ, அதே போல "சார்பு கோட்பாடு " கண்டு பிடிப்பும் அவர்க்களுக்குப் புதிதல்ல.- ஆலன் வாட்ஸ் - ( 1915 - 1973 ),பிரிட்டன் தத்துவ அறிஞர். 2 .பிரபஞ்சம் ஆழ்ந்த , எண்ணற்ற பிறப்பு , இறப்புக்களைக் கொண்டிருக்கிறது என்ற கோட்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒரே மதம் இந்து மதம் தான்.நவீன பிரபஞ்ச கோட்பாடுகளுடன் ஒத்துப் போகும் கால அளவுகளைக் கொண்ட ஒரே மதமும் அது தான்.-- டாக்டர் கார்ல் ஷாகன்( 1934 -1996 ), வான் இயற்பியலாளர். 3 .இந்தப் பூமியின் வயது, உலகின் கால அட்டவணை ஆகியவை குறித்த அறிவியல் பூர்வமான சிந்தனைகளை பழங்கால ரிஷிகள் உருவாக்கினர்.-ஆர்தர் ஹோம்ஸ் (1895 - 1965 ), புவியியலாளர், துர்ஹம் பலகலைக் கழக பேராசிரியர்.இங்கிலாந்து. (மேற்கண்ட 3 மேற்கோள்கள், தினமலர்,மதுரை பதிப்பில், இது இந்தியா என்னும் தலைப்பில் முறையே அக். 28 ,நவ 17 ,மற்றும் 22 ஆகிய தேதிகளில் வந்தவை). ///கி.மு. 17,476 முதல் கி.மு.11, 716 வரை = கிருத யுகம் கி.மு. 11,716 முதல் கி.மு.7,3...

யுகங்களும், இதிஹாச காலங்களும்.

யுகங்களும், இதிஹாச காலங்களும்.jeyasree சிபியும், ராமனும், ராவணனும், சோழனும், பாண்டியனும் வாழ்ந்த அடையாளங்கள் நமது நூல்களிலும், அரசர்கள் எழுதி வைத்த செப்ப்பெடுகளிலும் இருக்கிறது என்று பார்த்தோம். இவர்களுள் ராமனை ஒதுக்கினால், சோழர்களையும் தமிழர்களிலிருந்து ஒதுக்குவதற்குச் சமமாகும். ராமனை எங்கோ வடக்கில் இருந்த ஆரியன் என்று சொன்னால், அதே அடையாளம் சோழனுக்கும் பொருந்தும் - என்றெல்லாம் பார்த்தோம். ஒரு நூறு வருடங்களுக்கு முன்வரை இவர்களுக்குள் வேறுபாட்டினை, நம் மக்கள் எண்ணியும் பார்த்ததில்லை. ஆனால் என்றைக்குத் தமது பூர்வீக படிப்பான, குரு குலப் படிப்பையும், குடும்பம் அல்லது குலம் சார்ந்த தொழில் படிப்பையும் ஒதுக்கி விட்டு, ஆங்கிலேயன் கொடுத்த படிப்பில் முழுவதும் ஒன்றினார்களோ, அன்றிலிருந்து பாரதம் முழுவதும் நிலவிய பாரம்பரிய சரித்திரத்தையும், மற்றும் பல துறை அறிவையும் மறந்து விட்டனர். அப்படி மறந்ததில் ஒன்றுதான் காலம் பற்றிய அறிவு. அணுவுக்குள் அணுவாய், அப்பாலுக்கப்பாலாய் சுருங்கியும், விரிந்தும் இருந்த கோட்பாடுகளையும் அவற்றை ஊடுருவிய காலத்தையும் நம் பாரத நாட்டு மக்கள்தான் அறிந்திருந்தனர்....

குருக்கத்தி

குருக்கத்திப் பூவும், அதன் இளம் இலைகளும், முதிர் இலைகளும் சேர்ந்து அளிக்கும் தோற்றம், சங்க காலத்தில் இருந்து முல்லைத்திணைப் பாட்டுக்களை ஆக்கிய புலவர்களைப் பெரிதும் கவர்ந்தது போலும். குறிஞ்சிப்பாட்டு 92 ஆம் அடி “பைங் குருக்கத்தி” என்று முதிர் இலைகளைச் சொல்லும். இதே விவரிப்பை இளங்கோ சொல்லுவதைப் பின்னாற் பார்ப்போம். அடுத்து நற்றிணை 96 ஆம் பாட்டின் 5-9 அடிகள் ..................................................மதனின் துய்த்தலை இதழப் பைங் குருக்கத்தியென பித்திகை விரவு மலர் கொள்ளீரோ? என வண்டுசூழ் வட்டியள் திரிதரும் தண்டலை உழவர் தனிமட மகளே! என அருமையான காட்சியொன்றை விவரித்துச் செல்லும். மேலே மதன் (= மயக்கம்) என்பதைப் பார்த்தோம் இல்லையா? முதிர்ந்த பச்சை இலைப் பின்புலத்தில், ”மயக்கும் துய்த்தலை இதழோடு (=பஞ்சு போன்ற தூய வெள்ளை நிறம்) காட்சியளிக்கும் குருக்கத்தியையும், பித்திகைப் பூவையும் (=பிச்சிப்பூ, சிறு செண்பகம்) கலந்து வண்டுகள் சூழும் வட்டிலில் வைத்துக் கொண்டு “பூ வாங்கலையோ, பூவு?” என்று கூவிப் போகிறாளே, அந்த உழத்தி!” என்று தலைவி சொல்கிறாளாம். ”துய்த்தலை இதழப் பைங் குருக்கத்தி” - என்ன அருமைய...

விளையாட்டு

கிலி கிலியாடல் கிலியாடல் என்பது சிறுவர்கள் கிலுகிலுப்பை என்னும் கருவியைக் கொண்டு ஒலியெழுப்பிக் மகிழ்கிற விளையாட்டு. சங்க காலத்தில் இருந்து இந்த வழக்கம் வேறுபாடின்றி இன்றளவும் தொடர்ந்து வருகின்றது. சிறுபாணாற்றுபடை என்ற இலக்கியத்தில்.. கிளர்பூண் புதல்வரொடு கிலிகிலியாடும் என்று வருகிறது. இன்று முதல் செல்வந்தர் வீடுகளில் உள்ள குழந்தைகளின் அழுகையை அடக்க தம் தகுதிக்கேற்பவோ, தகுதிக்கு மீறியதாகவோ கிலுகிலுப்பைகளை வாங்கிக் குழந்தைகள் கைகளில் கொடுக்கப்படுவது நம் கண்கூடு. கோழிப்போர் தமிழர்கள் விலங்குகள்,பறவைகள் போன்றவற்றுக்கும் இடையே வீரம் இருக்கிறது என்பதைக் காட்ட அவைகளை மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தனர். சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் (305) குப்பைக் கோழித் தனிப்போர் போல என்று குறிப்பிடுவதிலிருந்து கோழிப்போர் சங்க காலம் தொட்டு வழக்கிலிருந்தமையை அறிய முடிகிறது. இவ்விளையாட்டு இன்று பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. கழங்காடுதல் மகளிர் விளையாட்டுகளில் ஒருவகை. இதைச் சுட்டிப் பிடித்தல் என்றும் வழங்குவர். வீடுகளின் திண்ணைகளில் அல்லது மேடான பகுதிகளில் “கழங்கினை“ (கழங...

ஆரியர்கள் கடந்த 7 நதிகள்.

ஆரியர்கள் கடந்த 7 நதிகள். jeyasree மொழி ஆராய்ச்சி செய்யக் கிளம்பி, வரலாற்று ஆராய்ச்சி செய்த மாக்ஸ் முல்லர் போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கு ரிக் வேதம் ஒரு சவாலாக இருந்தது. அதன் சமஸ்க்ருத மொழிபெயர்பு குழப்பமாக இருந்தது. அவர்களைக் குழப்பிய ஒரு சொல் சப்தசிந்து என்பதாகும். இது அடிக்கடி ரிக் வேதத்தில் வருகிறது. சப்த சிந்துவைத் தாண்டிச் சென்று போர் புரிந்த வர்ணணைகள் வருகின்றன. மேலும், நதி நீரில் எதிரிகளை மூழ்கடிப்பதும், அணைகளை உடைத்து நீரை ஓட விடுவதுமான விவரங்கள் ஆங்காங்கே வருகின்றன. எனவே சப்த சிந்து என்பது ஒரு பூகோளப் பகுதியைக் குறிக்கிறது, அந்தப் பகுதி எது என்று கண்டு பிடித்துவிட்டால், படையெடுத்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கண்டு பிடித்து விடலாம் என்று நினைத்தார்கள். சிந்து என்ற நதிப் பெயர் அவர்களுக்குத் தெரியும். சப்த என்றால் ஏழு என்று பொருள். சிந்து நதி ஏழு நதிகளாக இல்லை. எனவே சிந்து நதியுடன் சேர்த்து மொத்தம் ஏழு நதிகள் சிந்துவின் மேற்கே இருப்பவற்றைக் குறித்து இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்களது பைபிள் சொல்லும் மனிதனது தோற்றமும், தோற்றம் நடந்த இடமும் ஐரோப்பியப் பகுதிகளில...

சோழர்கள்'-தூங்கெயில் எறிந்த' செம்பியர்கள்

மனுவில் ஆரம்பித்து, இக்ஷ்வாகு, சிபி போன்ற மன்னர்கள் பரம்பரையில் சோழர்கள் வந்தனர் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் சொல்லப்பட்டுள்ளது. சிபியின் வம்சத்தில் வந்தவர்கள் ஆதலால் சோழர்கள் செம்பியன் என்றழைக்கப்பட்டனர். சிபி என்னும் அரசன் யார், அவனைப் பற்றித் தமிழ்ப் புலவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்று பார்த்தால், பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. அவற்றுள் முக்கிய ஆச்சரியம், சிபியுடன் மட்டுமல்ல, அயோத்தி ராமனுடனும், சோழர்களின் வம்சத்துக்குத் தொடர்பு உள்ளது என்பதாகும். அவனை முன்னிறுத்தி சோழ மன்னர்கள் பெருமை அடைந்தனர். பல கோணங்களிலிருந்தும், இதை மெய்ப்பிக்க முடியும். சிபியைப் பற்றிய கதை பல பழம் நூல்களில் உள்ளது. மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், புராணங்கள் போன்றவற்றில் உள்ளது. புத்த ஜாதகக் கதைகளில் உள்ளது. போதிசத்துவரே ஒரு முறை சிபியாகப் பிறந்தார் என்று புத்த ஜாதகக் கதைகள் கூறுகின்றன. மேலும் சிபி என்ற பெயர் பல வேறு இடங்களில், வெவ்வேறான காலக் கட்டத்தில் வருகிறது. பாகிஸ்தானத்தில் உள்ள பலுச்சிஸ்தானத்தில் சிபி என்ற பெயரில் ஓரிடம் உள்ளது. அங்குள்ள மக்கள் சிபி மக்கள் என்றும் அழைக்கப்படுகிறார...

மோஹஞ்சதாரோ

மொஹஞ்சதாரோ அல்லது மோஹனஸ்ய தரு? ஏறு தழுவும் வழக்கம் தமிழ் நாட்டு மதுரையிலும் இருந்திருக்கிறது. கிருஷ்ணன் வாழ்ந்த மதுராவிலும் இருந்திருக்கிறது. அந்த வழக்கம் சிந்து சமவெளிப்பகுதியிலும் இருந்திருக்கிறது என்பதை, மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள சின்னம் மூலம் அறிகிறோம். மொஹஞ்சதரோ என்னும் இடம் இன்று பாகிஸ்தானில் உள்ளது. இந்த இடத்தில் ஒரு பழைய நாகரிகம் இருந்தது என்று 1920 களில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடம் சிந்து நதிக் கரையில் உள்ளது. இதே காலக்கட்டத்தில் சிந்து நதியின் ஒரு கிளை நதியான ராவி நதிக்கரையில் ஹரப்பா என்னும் இடத்திலும், இதே நாகரிகம் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து நதிக்கரையில் இவை காணப்படவே, இங்கு காணப்பட்ட நாகரிகத்தைச் சிந்து சமவெளி நாகரிகம் என்கின்றனர். இந்தப் படத்தில் அந்த இரு இடங்களும் சிவப்பு நிறத்தில் அடிக்கோடிடப்பட்டிருக்கின்றன. இங்கு காணப்படும் நாகரிகத்தின் காலம் சுமாராக, இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களது கருத்து. அதாவது கி.மு.3000 வருட காலத்தில் இந்த நாகரிகம் இங்கு இருந்திருக்கிறது. அதே காலக்கட்டத்தில் ஆரிய-...